பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுமா? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடவசதி இல்லாத பள்ளிகளில் தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக குறைந்துள்ளது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்திய தமிழக அரசு பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவித்தது.

 சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

அதன்படி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளியில் சென்னை அசோக்நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அங்கு கடைபிடிக்கப்படுகிறதா? என்று அவர் ஆய்வு செய்தார். பின்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது ஏன்?

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது ஏன்?

அப்போது அவர் தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் பாதிப்பின்றி கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்படுகிறது என்று கூறினார்.

இந்த பகுதியில் பள்ளிகள் இயங்காது

இந்த பகுதியில் பள்ளிகள் இயங்காது

மணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்த்து உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறிய ராதாகிருஷ்ணன் நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் அப்பகுதியில் பள்ளிகள் இயங்காது எனவும் தெரிவித்தார்,

சுழற்சி முறையில் வகுப்புகள்

சுழற்சி முறையில் வகுப்புகள்

தமிழகத்தில் மொத்தம் 33.46 லட்சம் மாணவர்கள் இலக்கு உள்ள நிலையில் 77% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 2.5 லட்சம் இலக்கு உள்ள நிலையில் 1.80 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இடவசதி இல்லாத பள்ளிகளில் வகுப்புகள் நடத்துவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் இடவசதி இல்லாத பள்ளிகளில் 3 நாட்கள் கழித்து தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Recommended Video

    சென்னை: 77% மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டாச்சு... சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!
     5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டாம்

    5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டாம்

    தொடர்ந்து கூறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அடுத்த 2 வாரம் கவனக்குறைவாக இருக்க கூடாது, ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட நோய் தொற்று குறைந்து வருகிறது. 30 விழுக்காட்டிலிருந்து 10 - 12% வரை நோய் தொற்று பரவல் குறைந்துள்ளது 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் அணியக்கூடாது. ஆனால் மற்ற குழந்தைகளுக்கு விழிப்புணர்வு உள்ளது. முகக்கவசம் போட சவாலாக இருக்கும் போது தனி இடத்தில் வந்து தளர்வு படுத்திக்கொள்ளலாம் என்று கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+