தமிழகத்தில் இன்று 5755 பேருக்கு கொரோனா.. எந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்.. விவரம்
சென்னை : தமிழகத்தில் இன்று 5,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 597 பேரும், சேலத்தில் 398 பேரும், திருப்பூரில் 361 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 150 பேர் பலியாகி உள்ளனர்.
கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்
தமிழகத்தில் இன்று 5,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 24,55,332 ஆக உயர்ந்துள்ளது.
குணம்
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 8132 பேர் மீண்டனர். இதனால் தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,75,963 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 47,318 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பாதிப்பு
சென்னையில் 350 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,31,127 ஆக உயர்ந்துள்ளது. இதில் 519373 பேர் தொற்றில் இருந்து இதுவரை மீண்டுள்ளனர். சென்னையில் தற்போது கொரோனா பாதிப்புடன் 3611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிப்பு அதிகம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கோவையில் தான் இன்னமும் அதிகமாக உள்ளது. கோவையில் ஒரே நாளில் 698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1199 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 26 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். 6721 பேர் தற்போது கோவையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர்.
ஈரோடு திருப்பூர்
ஈரோட்டில் 597 பேரும், சேலத்தில் 398 பேரும், திருப்பூரில் 361 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் நாமக்கல்லில் 228 பேரும், செங்கல்பட்டில் 259பேரும், சென்னையில் 350 பேரும், திருச்சியில் 220 பேரும், கடலூரில் 138 பேரும், நீலகிரியில் 132 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.