தமிழகத்தில் வீரியமாக பரவும் கொரோனா.. 2,069 பேருக்கு புதிதாக தொற்று - 11,094 பேருக்கு சிகிச்சை
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,069 பேராக அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,069 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 11,094 பேர் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மாஸ்க் அணிவது அவசியம் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2069 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,75,185ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 909 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 352 பேருக்கும், கோவையில் 96 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,26,065 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 11,094பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.