இன்னும் 3 வாரம்தான்.. சென்னையிலேயே உருவாக்கப்படும் கொரோனா டெஸ்டிங் கருவிகள்.. கலக்கும் தமிழகம்!
கொரோனா தொடர்பான வெப்பநிலை சோதனை கருவிகள் சென்னையிலேயே இன்னும் 2-3 வாரங்களில் தயாரிக்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது.
சென்னை: கொரோனா தொடர்பான வெப்பநிலை சோதனை கருவிகள் சென்னையிலேயே இன்னும் 2-3 வாரங்களில் தயாரிக்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் 126 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமாக மகாராஷ்டிராவில் மட்டும் 29 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவர்தான் பாதிக்கப்பட்டார்.
ஆனாலும் அவரும் குணப்படுத்தப்பட்டுவிட்டார். தமிழகத்தில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எப்படி கருவிகள்
கொரோனா வைரஸ் சோதனையை மேற்கொள்ள வெப்பநிலை கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவிகளை மக்களின் நெற்றிக்கு மேல் வைத்து வெப்பநிலை மாறுபாட்டை கண்டுபிடிப்பார்கள். இதன் மூலம்தான் கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை உறுதி செய்து, அதன்பின் சோதனை செய்வார்கள். இந்தியா முழுக்க பல்லாயிரம் கொரோனா வைரஸ் சோதனை கருவிகள் பயன்பாட்டில் உள்ளது.

ஆனால் இல்லை
ஆனால் இந்த கருவிகள் எதுவும் இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. இந்த கொரோனா வைரஸ் சோதனை கருவிகள் எல்லாம் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. ஜெர்மனியில் இருந்து இந்த கருவிகள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கருவியை உருவாக்கும் நிறுவனங்கள் எதுவும் இல்லை. இதன் விலை அதிகம் உள்ளது.

விமானம் எப்படி
அதேபோல் விமான போக்குவரத்து பிரச்சனை காரணமாக இந்த கருவிகளை இறக்குமதி செய்வதிலும் நிறைய பிரச்சனைகள் உள்ளது. இந்த நிலையில்தான் கொரோனா தொடர்பான வெப்பநிலை சோதனை கருவிகள் சென்னையிலேயே இன்னும் 2-3 வாரங்களில் தயாரிக்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது. சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனமான ஹெல்த்கேர் குரூப் நிறுவனம் இந்த கருவியை உருவாக்கி உள்ளது.

சோதனை செய்து வருகிறது
இந்த கருவியை தற்போது அந்த நிறுவனம் சோதனை செய்து வருகிறது. அதன்பின் 3 வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு அந்த நிறுவனம் கருவியை கொண்டு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். வெறும் 500-1000 ரூபாயில் இந்த கருவிகள் இதனால் சந்தையில் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து இதை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள்.

செம பாஸ்
அதேபோல் தமிழகத்தில் இருக்கும் வேறு சில நிறுவனங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து வருகிறது. கொரோனா தொடர்பாக மிக தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கொரோனாவிற்கு மருந்து தமிழகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை வைத்து இருந்தார். தமிழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதற்காக தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications