Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில்தான் பால், நெய் விலை குறைவு.. எதிர்க்கட்சிகள் புரிஞ்சுக்கோங்க! அமைச்சர் நாசர் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆவினில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டாலும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பால் உற்பத்தி பொருட்கள் குறைவான விலையில் விற்கப்படுகிறது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

நிதிச் சுமையால் தான் ஆவின் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பதை, எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

ஆவின் பால், நெய், வெண்ணெய் விலையை ஆவின் நிறுவனம் அதிகரித்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் அமைச்சர் நாசர் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

ஆவின் தயாரிப்புகள்

ஆவின் தயாரிப்புகள்

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், பால்கோவா, மைசூர் பாக்கு, குலாப் ஜாமுன், ரசகுல்லா உள்ளிட்ட 235 வகையான பால் உப பொருட்களை தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் பால் விலையை மாற்றி அமைத்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தின் பிரிமியம் நெய் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூபாய் 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது.

தொடர் விலை அதிகரிப்பு

தொடர் விலை அதிகரிப்பு

இதன் மூலம் கடந்த 9 மாதங்களில் மட்டும் ஆவின் நெய் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டது. நெய் மற்றும் பால் விலையேற்றத்திற்கு பொது மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்திருந்த நிலையில் ஆவின் வெண்ணெய் விலையும் நேற்று அதிகரிக்கப்பட்டது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு கலக்காத வெண்ணெய் 500 கிராம், ரூ. 250 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் விலை ரூ. 260 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் தயாரிப்புகள் தொடர்ச்சியாக விலை உயர்த்தப்பட்டு வருவதைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இனி ஏழைகள் பயன்படுத்த முடியாது

இனி ஏழைகள் பயன்படுத்த முடியாது

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான ஆவின் பொருட்களை பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் எளிய மக்கள் தங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பெற்று வந்த நிலையில், அதனையும் அவர்களுக்கு கிடைக்க விடாமல் திமுக அரசு தடுத்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

 எதிர்க்கட்சிகள் கண்டனம்

எதிர்க்கட்சிகள் கண்டனம்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இந்த விலை உயர்வின் மூலம் ஏழை எளிய மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், நெய், வெண்ணெய் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் தின்பண்டங்களின் விலையும் அதிகரிக்கும். மொத்தத்தில், பொதுமக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார். தனியார் பால் நிறுவனம் பயன்பெறும் வகையில், ஆவின் விலையை உயர்த்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இங்கு தான் குறைவு

இங்கு தான் குறைவு

இந்நிலையில், ஆவின் தயாரிப்புகளின் விலை உயர்வு பற்றி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், "ஆவினில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டாலும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பால் உற்பத்தி பொருட்கள் குறைவான விலையில் விற்கப்படுகிறது. நிதிச் சுமையால் தான் விலையேற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை, எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+