எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்ல முடியாது.. கே பாலு
சென்னை: மாம்பழம் சின்னம் யாருக்கும் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லவே இல்லை. அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை தவறு என்று நீதிமன்றம் கூறவில்லை என வழக்கறிஞர் கே பாலு பேட்டியளித்துள்ளார். மேலும் எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்ல முடியாது எனவும், தீர்ப்பின் முழு விவரத்தை பார்க்காமல் தங்களுக்கு சாதகமாக உள்ளது என்று ராமதாஸ் கூற முடியாது என்றும் கூறினார்.
சென்னை திநகரில் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2026 வரை அன்புமணிக்கு தலைவர் பதவி காலம் இருப்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. தீர்ப்பின் முழு விவரத்தையும் பார்க்காமல் தீர்ப்பு தங்களுக்கு சாதகம் என சொல்வது சரியல்ல. 18 வது பத்தியை 19வது பத்தியுடன் சேர்த்து படிக்க வேண்டும். 18 வது பத்தியை மட்டும் படித்துவிட்டு பேசக்கூடாது.
ராமதாஸ் திறப்பு கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.மாம்பழம் சின்னம் யாருக்கும் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லவே இல்லை. அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை தவறு என்று நீதிமன்றம் கூறவில்லை. அப்படி மாம்பழம் சின்னத்தை முடக்கினாலும் அதில் ராமதாஸ் தரப்பு வெற்றி என எப்படி சொல்ல முடியும். இதற்காகவா அவர்கள் போராடி வருகிறார்கள். எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பு வெல்லவே முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications