புதன் தோறும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்! அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்! டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி!
சென்னை : தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள் ஆகியோர், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பேற்றதில் இருந்தே அவர் தலைமையிலான போலீசார் தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை பிடிக்கவும் கஞ்சா விற்பனை செய்வோரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரவுடிகளை பிடிக்கும் முயற்சியாக அக்டோபர் மாதத்தில் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை, கஞ்சா விற்பனையை ஒழிக்கும் பொருட்டு ஆபரேஷன் கஞ்சா 2.0 உள்ளிட்ட ஆபரேஷன்கள் நடத்தப்பட்டன.

டிஜிபி சைலேந்திர பாபு
இதுமட்டுமல்லாமல் காவல் உதவி மையம், காவல் உதவி ஆப், காவலன் ஆப், ஆப்ரேஷன் மறுவாழ்வு, காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு உள்ளிட்ட பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் தமிழக மக்களிடையேயும், காவலர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தியும் வருகிறார் டிஜிபி சைலேந்திர பாபு.

காவல்துறை
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசிய முதல்வர் காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வரும்போது அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இதனையடுத்து தமிழக காவல்நிலையங்களில் புகார் தாரர்களையும் வரவேற்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

பொதுமக்கள் புகார்
இந்நிலையில் தமிழக காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன. சிவில் பிரச்சினையல்லாது குற்ற சம்பவங்கள், அடி தடி வழக்குகள், இருசக்கர வாகன கொள்ளை, செல்போன் செயின் பறிப்பு போன்ற குற்றங்கள் நடக்கும் போது அதனை காவல்நிலையங்களில் புகாராக பதிவு செய்ய வந்தால் போலீசார் வழக்குப் பதிவு செய்வதில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்கள் டிஜிபிக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

குறை தீர்ப்பு முகாம்
இந்நிலையில் வாரந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள் ஆகியோர், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனு பெறவேண்டும் எனவும் , பொதுமக்களின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவிவுறுத்தியுள்ளார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications