சென்னை மெரினா கடலில் மூழ்கிய சிறுவன்.. முதலுதவி அளித்து காப்பாற்றிய டிஜிபி சைலேந்திர பாபு
சென்னை: சென்னை மெரினாவில் இன்று கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய சிறுவனுக்கு உரிய நேரத்தில் டிஜிபி சைலேந்திர பாபு முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தலைநகர் சென்னையில் மிகப்பெரிய பொழுதுபோக்கு இடமாக மெரினா கடற்கரை உள்ளது. இதனால் தினந்தோறும் கடற்கரைக்கு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.
Recommended Video
குறிப்பாக விடுமுறை தினங்களில் வழக்கத்தை விட அதிகளவில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வந்து செல்வது வாடிக்கையானதாக உள்ளது.
மேலும் பலர் கடலில் குளித்தும், விளையாடியும் மகிழ்கின்றனர். இதில் சிலர் எதிர்பாராத விதமாக சிலர் கடல் அலையில் சிக்கிவிடுவதும் அவ்வப்போது நடக்கிறது. இருப்பினும் ஆபத்தை உணராமல் பலர் கவனக்குறைவாக கடலில் இறங்கி விளையாடுவதுடன், குளித்தும் வருகின்றனர். இ வர்களை போலீஸார் எச்சரித்தாலும் அதனை பொருட்படுத்துவதில்லை. இது கவலைக்குரிய விஷயமாகும்.
இந்நிலையில் தான் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான மக்கள் சென்னை மெரினா கடற்கரைக்கு படையெடுத்தனர். இந்த வேளையில் எதிர்பாராத விதமாக சிறுவன் ஒருவர் கடலில் மூழ்கி தத்தளித்தார். இதையடுத்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டார்.
கரைக்கு வந்தாலும் கூட சிறுவன் இயல்பு நிலைக்கு வரவில்லை. இதனால் சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர். இந்த வேளையில் கடற்கரையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நடைப்பயிற்சிக்கு சென்றார். உயிருக்கு போராடிய சிறுவனை பார்த்த அவர் முதலுதவி அளித்தார்.
உயிருக்கு போராடிய சிறுவனின் கண்ணம், நெஞ்சை அழுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். பின்னர் அந்த சிறுவனை கையில் தூக்கிய டிஜிபி சைலேந்திரபாபு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. டிஜிபி சைலேந்திர பாபுவை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications