இளையராஜாவுக்கு ஒன்றல்ல.. 5 பாரத ரத்னா விருது கூட கொடுக்கலாம்! திடீரென புகழ்ந்து தள்ளிய அமீர்
சென்னை : இளையராஜாவின் இசை தமிழர்கள், உலக தமிழர்களை தாண்டி மொழி தெரியாதவர்களை கூட கவர்ந்துள்ளது எனவும், அவருக்கு ஒரு பாரத ரத்னா இல்லை. ஐந்து பாரத ரத்னா கொடுத்தாலும் தகுதியானது என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார்.
அதில் பிரதமர் மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரை பெருமைப்படுவார் எனக் கூறியிருந்தார்.

இளையராஜா சர்ச்சை
தமிழகம் முழுவதும் இளையராஜாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்தது. அதே நேரத்தில் தனது கருத்துக்களை திரும்பப் பெற முடியாது எனவும் இளையராஜா அவரது தம்பி கங்கை அமரன் கூறியதாக தகவல் வெளியானது.

பாஜக ஆதரவு
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து கிளம்பிய நிலையில், அவருக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, ஆதரவு கொடுத்தார். குறிப்பாக இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்த பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, இசையமைப்பாளர் இளையராஜா பேசியது சரிதான் எனவும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பாரத ரத்னா விருது
மேலும் பாரத ரத்னா விருது வழங்கக் கோரி தமிழக பாஜக சார்பில் கடிதம் எழுத தயராக இருப்பதாகவும் கூறியிருந்தார். அண்ணமாலையின் இந்த பேச்சுக்கும் விமர்சனங்கள் எழுந்தது. விருதுக்காக அவர் பிரதமரை புகழ்ந்து பேசியதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. இந்நிலையில் இளையராஜாவுக்கு ஒரு பாரத ரத்னா இல்லை. ஐந்து பாரத ரத்னா கொடுத்தாலும் தகுதியானது என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

இயக்குனர் அமீர்
சென்னையில் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அமீர், இளையராஜாவின் இசை தமிழர்கள், உலக தமிழர்களை தாண்டி மொழி தெரியாதவர்களை கூட கவர்ந்துள்ளது. அவருக்கு ஒரு பாரத ரத்னா இல்லை. ஐந்து பாரத ரத்னா கொடுத்தாலும் தகுதியானது. மொழி தெரியாதவர்கள் கூட பாராட்டுவதை விட ஜனாதிபதி பதவியோ அல்லது வேறு எந்த பதவியோ பெரியது கிடையாது. இளையராஜா இங்கு இருந்தால் கூட நான் இந்த கருத்தை கூறியிருப்பேன்" என்றார்.












Click it and Unblock the Notifications