மகளிர் வாக்குகள்.. திமுகவுக்கு விஜய்யால் வந்த நெருக்கடி.. புதிய வியூகம் வகுத்த ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 38 மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒரு பெண் வேட்பாளர்கள் என்ற வகையில், 40 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கலாம் என்று திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மகளிர் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்யவே திமுக இப்படியோரு வியூகத்தை வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு தலைவலியாக மாறி இருக்கிறது. கரூர் விவகாரம் காரணமாக விஜய்க்கு சில பின்னடைவு ஏற்பட்டாலும், சாமானிய மக்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவு இருந்து வருகிறது. அண்மையில் திமுக நடத்திய கருத்துக் கணிப்பில் விஜய்க்கு 23 சதவிகித வாக்குகள் இருப்பதாக தெரிய வந்தது.

2026 சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து திமுக தரப்பில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மகளிரை வாக்குகளை மையப்படுத்தி மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டன. அதேபோல் இளைஞர்களை கவரும் வகையில் தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இது நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுகவுக்கு கைக் கொடுத்தது.
ஆனால் தவெக களமிறங்கி இருப்பதால், மகளிர் மற்றும் இளைஞர்களின் ஆதரவு குறைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. திமுக எடுத்த கருத்துக் கணிப்புகளில் இது தெளிவாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் மகளிரின் வாக்குகளை கவர்வதற்காக திமுக தலைமை முக்கிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளது.
திமுகவில் தற்போது 6 பெண் எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர். இதனால் இந்த தேர்தலில் திமுக தரப்பில் அதிகளவில் பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உதயநிதி ஸ்டாலினின் அழுத்தம் காரணமாக இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்ட போதே, பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது 38 மாவட்டங்கள் இருக்கிறது என்றால், மாவட்டத்திற்கு ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனால் திமுக தலைமை தரப்பில் 40 முதல் 50 பெண்களுக்கு திமுக தரப்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உத்தேச பட்டியலை மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து கேட்டிருக்கிறது.
ஏற்கனவே புதிய விண்ணப்பத்தாரர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை அளிக்கப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதனால் அடுத்தடுத்து மகளிரை குறி வைத்து இன்னும் சில அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
Alangulam: ஆலங்குளத்தில் பூங்கோதைக்கு ஏமாற்றம்.. மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு! நேரடியாக மோதும் திமுக vs அதிமுக! -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications