திருநங்கைகளுக்கு அந்தஸ்தை வழங்கினார் தந்தை.. இலவச பயண அறிவிப்பு மூலம் புரட்சியை செய்த மகன் ஸ்டாலின்
சென்னை: திருநங்கைகளுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்ற ஸ்டாலின் அறிவித்துள்ளது தந்தையை போல் தங்கள் நலனில் அக்கறை கொண்டவர் மகன் என்பதை நிரூபித்துவிட்டதாக திருநங்கைகள் தெரிவிக்கிறார்கள்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. பெண்களை போல் திருநங்கைகளும் இலவசமாக பயணம் செய்ய அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.
இதை கனிவுடன் பரீசிலனை செய்த முதல்வர் விரைவில் முடிவெடுப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் கருணாநிதி பிறந்தநாளான இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் திருநங்கைகளும் நகர பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.

திருநங்கை
இந்த அறிவிப்பு திருநங்கைகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளை இதுவரை அவர்கள் விரும்பத்தகாத பெயர்களை வைத்து மக்கள் அழைத்து வந்தார்கள்.

வேதனை
இதனால் திருநங்கைகள் வேதனையுடனேயே வீதிகளில் நடமாடி வந்தனர். ஆனால் அரவாணிகள் என அழைக்கப்பட்ட இவர்கள் கருணாநிதி ஆட்சியில்தான் கவுரமாக திருநங்கைகள் என அழைக்கப்படுகிறார்கள். அவரது மகனான ஸ்டாலின் ஆட்சியில் திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணம் என்ற அறிவிப்பு சாதாரண அறிவிப்பு , பெரும் புரட்சியாகும்.

அங்கீகாரம்
திருநங்கைகளுக்கு வடமாநிலத்தில் இருக்கும் அங்கீகாரம் தென் மாநிலங்களில் இல்லாத நிலையே இருந்து வந்தது. இது மெல்ல மெல்ல மாறி தற்போது இவர்கள் நர்ஸ், மருத்துவர், போலீஸ் உள்ளிட்ட பணிகளில் அமர்ந்துள்ளார்கள். மேலும் திருநங்கைகளே ஒரு தன்னார்வல அமைப்புகளை ஏற்படுத்தி மிகவும் அடிமட்டத்தில் உள்ள தங்கள் சமூகத்தினருக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.

ஏளனம்
தங்கள் சமூக மக்களுக்கு மட்டுமல்லாமல் தங்களை எப்போதும் ஏளனமாக பார்த்து பேசிய பொதுமக்களுக்கும் இவர்கள் பல உதவிகளை செய்து வருகிறார்கள். திருச்செங்கோட்டில் திருநங்கை ஒருவர் கவுன்சிலராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் தான் அதுவும் 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் என்ற ஒன்றை கருணாநிதி தொடங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் நலத்திட்டங்களை செய்து வந்தார்.

மருத்துவக் காப்பீட்டு திட்டம்
திருநங்கைகளுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம், ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது. இது போல் விண்ணப்பங்களில் ஆண், பெண் என்பதை போல திருநங்கைகளை குறிக்க மூன்றாம் பாலினத்தவர் என தமிழிலும் டிரான்ஸ்ஜென்டர் என்ற வார்த்தையின் T என்ற எழுத்தும் குறிப்பிடப்பட்டது.

திருநங்கைகள்
திமுக ஆட்சியில் திருநங்கைகளும் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் கருணாநிதி அவர்களுக்கு நிறைய செய்துள்ளார். அது போல் அவரது மகன் ஸ்டாலினும் தற்போதைய ஆட்சியில் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications