23-ம் தேதி பேரணி... கமலுக்கு முறைப்படி நேரில் அழைப்பு விடுத்த திமுக
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்குமாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக முறைப்படி நேரில் அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ம.நீ.ம. தலைமை அலுவலகத்திற்குச் சென்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் கமலை சந்தித்து பேரணிக்கான அழைப்பிதழை அளித்தனர்.
திமுக விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கமல், ம.நீ.ம. நிச்சயம் கலந்துகொள்ளும் என உறுதியளித்துள்ளார்.

திமுக அழைப்பு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 23-ம் தேதியன்று (திங்கள்கிழமை) சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது திமுக. அதில் கலந்துகொள்ளுமாறு கூட்டணிக்கட்சிகள் அனைத்துக்கும் அழைப்பு விடுத்த ஸ்டாலின், இப்போது கூட்டணி அல்லாத கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மகிழ்ச்சி
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யமும் கலந்துகொள்ளும் என கமல்ஹாசன் நேற்றுமாலை அறிவித்தது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. பெருந்தன்மையோடு கமல் இவ்வாறு முடிவெடுத்ததால், அதனை வரவேற்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதியிடம் முறைப்படி அழைப்பிதழை கொடுத்து அனுப்பினார் ஸ்டாலின்.

வரவேற்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமலை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, ஸ்டாலினின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன், நீங்கள் நிச்சயம் பேரணியில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட நிச்சயம் தனது கட்சி இந்த விவகாரத்தில் திமுகவுக்கு துணை நிற்கும் எனக் கூறியுள்ளார்.

நிர்வாகிகள்
கமலிடம் அழைப்பிதழ் அளிப்பதற்கு முன்பு ம.நீ.ம. நிர்வாகிகள் அருணாச்சலம், உமாதேவி, தங்கவேல் உள்ளிட்டோருடனார்.எஸ்.பாரதியும், பூச்சி முருகன் நடப்பு அரசியல் நிலவரங்கள் பற்றி மனம் விட்டு பேசியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications