அதான் களத்தில் கனிமொழி இருக்காங்க.. அப்புறம் எதுக்கு விசிட்? உதயநிதி மீது திமுக சீனியர்கள் அதிருப்தி
சென்னை: சாத்தான்குளம் பிரச்சனையில் லோக்சபா எம்.பி. கனிமொழி முகாமிட்டு பணியாற்றும் நிலையில் திடீரென இளைஞரணி செயலாளர் உதயநிதி அங்கு பயணம் மேற்கொண்டது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் கருணாநிதி இருந்த போதே மகள் கனிமொழி ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டார். ஆனாலும் டெல்லி பணிகளுடன் ஒதுங்கிக் கொண்டவராக இருந்தார் கனிமொழி. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறைவாசமும் அனுபவித்தார்.

கனிமொழி எம்பி
பின்னர் திமுகவின் மகளிரணி செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யுமானார் கனிமொழி. அத்துடன் நிற்காமல் தூத்துக்குடியில் பிரச்சனை எது என்றாலும் முதல் நபராக அங்கே போய் களத்தில் நிற்கிறார் கனிமொழி.

களத்தில் நின்ற கனிமொழி
சாத்தான்குளத்தில் போலீசார் தாக்குதலில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பத்தில் நீதிக்காக போராடியவர் கனிமொழி. அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் கனிமொழியின் செயல்பாடுகள் திமுகவின் மத்தியில் பெரும் மதிப்பையும் பெற்றிருந்தன. இதனால் இப்படி கொரோனாவைப் பற்றி கவலைப்படமால் கனிமொழி பயணம் மேற்கொள்கிறாரே என்கிற ஆதங்கத்தை கடிதம் வழியாகவும் திமுக நலம் விரும்பிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

சாத்தான்குளத்தில் உதயநிதி
இந்த நிலையில் திடீரென சாத்தான்குளத்துக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சென்று பாதிக்கப்பட்டோர் குடும்பத்தை பார்த்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார். இப்போது திமுகவினர் , உதயநிதியின் சாத்தான்குளம் பயணத்தை சிலாகித்துக் கொண்டிருக்கின்றனர். இது அப்பட்டமாக கனிமொழியை கடுப்பேற்றும் நடவடிக்கைதான் என அதிருப்தியை காட்டுகின்றனர் திமுக சீனியர்கள்.

சீனியர்கள் அதிருப்தி
ஒவ்வொரு முறையும் திமுகவில் கனிமொழி ஸ்கோர் செய்யும் போதெல்லாம் உதயநிதி தலையிடுவதும் அது திசை மாறுவதும் வாடிக்கை என்கின்றனர் திமுக சீனியர்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போதும் சரி, தேர்தல் பிரசாரத்தின் போதும் சரி.. கனிமொழிக்கு இமேஜ் கூடுகிறது என்றால் உடனே உதயநிதியை ஒரு லாபி இறக்கிவிட்டு ஆட்டையை கலைப்பதையே வாடிக்கையாகவும் வைத்திருக்கிறார்கள் என்கின்றனர்.
-
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
சாத்தான்குளம் வழக்கில் ஜெயிலில் உள்ள காவலர்கள் குடும்பத்திற்கு முன்னாள் காவலர்கள் செய்த உதவி












Click it and Unblock the Notifications