திமுக கூட்டணியில் மக்கள் விடுதலை கட்சிக்கு 1 சீட்.. முருகவேல் ராஜன் பேட்டி!
சென்னை: திமுக கூட்டணியில் எங்களுக்கு 1 இடம் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர் என திமுக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவை சந்தித்த பிறகு மக்கள் விடுதலை கட்சித் தலைவர் முருகவேல் ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
மதுரையைச் சொந்த ஊராகக் கொண்டவர் முருகவேல் ராஜன். பாமக நிறுவனர் ராமதாஸால் அரசியலுக்கு கொண்டுவரப் பட்டவர். தென் மாவட்டத்தைச் சேர்ந்தவரான அவரை வட மண்டலத்தில் உள்ள வந்தவாசி தொகுதியில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ ஆக்கினார் ராமதாஸ். 2002ல் பாமகவில் இருந்து விலகிய முருகவேல்ராஜன் பின்னர் மக்கள் விடுதலை கட்சியைத் தொடங்கினார்.

திமுக கூட்டணியில் முருகவேல் ராஜனின் மக்கள் விடுதலை கட்சியும் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டசபை தொகுதி முருகவேல் ராஜனின் மக்கள் விடுதலை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு, கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது வரை 2 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த தொகுதி பங்கீடு குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தானது. முஸ்லீம் லீக் ஏணி சின்னத்திலும், மமக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட உள்ளது.
இந்நிலையில், இன்று மக்கள் விடுதலை கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, அக்கட்சியின் தலைவர் முருகவேல் ராஜன் உள்ளிட்ட குழுவினர் இன்று அண்ணா அறிவாலயம் வந்து டிஆர் பாலு தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முருகவேல் ராஜன், “திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம். 2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி இன்று வரை திமுக கூட்டணியில் இருக்கிறோம். 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டோம். அதேபோல, 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் விடுதலைக் கட்சிக்கு சீட் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம்.
திமுக குழுவினர் எங்கள் கருத்துகளைக் கேட்டு, இடம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். நிலக்கோட்டையில் மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளேன். அதே தொகுதியா அல்லது வேறு தொகுதியா என முதல்வருடன் ஆலோசித்து பரிசீலித்து உறுதிப்படுத்தி தெரிவிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல்












Click it and Unblock the Notifications