Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆ.. அதென்ன? வானத்தை பார்த்து வாவ் சொன்ன தமிழக மக்கள்! அது எலான் மஸ்க் சாட்டிலைட் இல்லையாம்.. அப்போ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு வானில் ரயில்போன்று புள்ளி புள்ளியாக கோடுகள் இருந்ததை பொதுமக்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். புதுவிதமாக வானில் தோன்றிய இந்த வடிவம் என்ன என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் நேற்று பரவலாக பல மாவட்டங்களில் வானத்தில் ஒளிரும் ரயில் போன்ற தோற்றம் திடீரென தெரிந்து இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இது குறித்து பலர் படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சென்னை, மதுரை, திண்டுக்கல், திருவள்ளூர் என பல மாவட்டங்களில் இந்த தோற்றத்தை மக்கள் வியந்து பார்த்து இருக்கின்றனர். இது நட்சத்திர கூட்டமா அல்லது வேறு ஏதேனும் செயற்கைக்கோளா என்ற கேள்வியோடு இரவு மக்கள் வானைப் பார்த்தபடி நின்றனர்.

வெளிச்சப் புள்ளி

வெளிச்சப் புள்ளி

இருள் சூழல் வானில் தோன்றிய அந்த வெளிச்சப் புள்ளிகள் மின்னியபடி வரிசையாக நகர்ந்து சென்றது மக்களை ஆச்சரியம் அடைய செய்ததோடும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது. நேற்று இரவு சுமார் 7:00 மணி அளவில் வானில் திடீரென்று ரயில் போன்று நகரும் இந்த வெண்ணிற ஒளி புள்ளிகள் தென்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றன.

20க்கும் அதிகமான புள்ளிகள்

20க்கும் அதிகமான புள்ளிகள்

4 முதல் 5 புள்ளிகள் தொடக்கத்தில் வரிசையாக இருந்ததைபோல் தெரிய தொடங்கிய நிலையில், போகபோக இந்த எண்ணிக்கை அதிகரித்து 20 க்கும் அதிகமான புள்ளிகள் வரிசையாக தெரிய தொடங்கி இருக்கின்றன. தமிழ்நாட்டில் இதுபோன்ற வெள்ளை நிற புள்ளி கோடு வானில் தென்படுவது முதல் முறை கிடையாது.

அக்டோபர் மாதத்தில் தெரிந்த கோடு

அக்டோபர் மாதத்தில் தெரிந்த கோடு

கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில் அச்சு அசலாக இதேபோன்ற வெள்ளை நிற ஒளிப்புள்ளிகள் வரிசையாக சாய்ந்த கோடு வடிவத்தில் வானில் காட்சியளித்து இருக்கிறது. இதேபோன்று உத்தர பிரதேசம், பீகார் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே போன்ற வெள்ளை நிற ஒளி புள்ளிக்கோடு காட்சிகள் தென்பட்டது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

அப்போதும் இதை உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ள ஸ்டார் லிங்க் எனப்படும் பல செயற்கை கோள்களின் தொகுப்பு என்று கூறப்பட்டது. உலகில் உள்ள மக்கள் தொடர்புக்கு எட்டாத பகுதிகளுக்கு அதிவேக இணைய வசதியை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டதே ஸ்டார் லிங் செயற்கைக்கோள்கள்.

42,000 செயற்கைக்கோள்

42,000 செயற்கைக்கோள்

2015 ஆம் ஆண்டில் இருந்தே 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் இதனை விண்ணில் செலுத்தி வருகிறது. இது வரை 13 பிரிவுகளாக 775 செயற்கைக் கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தி உள்ளது. சூரிய ஒலி சக்தி மூலம் இயங்கி வரும் இந்த ஸ்டார் லிங் திட்டத்தில் 12,000 பிரிவுகளை விண்ணுக்கு அனுப்ப 'ஸ்பேஸ் எக்ஸ்' திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் 42,000 செயற்கைக் கோள்கள் பூமியை சுற்றி வர இருப்பதாக கூறப்படுகிறது.

பழைய செய்தியா?

பழைய செய்தியா?

இது தொடர்பாக வெளியான செய்தி பழையது என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அது செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி பழைய புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறதே தவிர இந்த நிகழ்வு புதியதுதான். நமது ஒன் இந்தியா செய்தியாளர்களும் இதை பார்த்து படம் பிடித்து உள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+