டிஆர்டிஓ வெளியிட்ட 2-டிஜி கொரோனா மருந்து ஆக்சிஜன் தேவையை குறைக்கிறது என்கிறார் அமைச்சர்
சென்னை: கொரோனா வைரஸ் வீரியத்தை குறைக்கும் மருந்தை டிஆர்டிஓ வெளியிட்டுள்ளது. இது கொரோனா சிகிச்சையில் மைல் கல்லாக இருக்கும் என்று அரசு நம்புகிறது.
Recommended Video
டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) (2-deoxy-D-glucose) என்ற கொரோனா தடுப்பு மருந்து டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டனர்.

கொரோனா வைரஸ் வளர்ச்சியை தடுக்கும்
இந்த மருந்து பவுடர் வடிவில் இருப்பதால், தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுப்பதாக கூறப்படுகிறது.

வைரஸ் பெருக்கம் தடுப்பு
2020 ஏப்ரல் மாதம், கொரோனா முதல் அலையின்போது, ஐ.என்.எம்.ஏ.எஸ்-டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் ஹைதராபாத்தின் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (சி.சி.எம்.பி) உதவியுடன் ஆய்வக பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேலும் இந்த மூலக்கூறு SARS-CoV-2 வைரஸுக்கு எதிராக திறம்பட செயல்படுவதைக் கண்டுபிடித்தது. இந்த மருந்து வைரஸ் பெருகுவதை தடுக்கிறது.

பரிசோதனைகள்
இந்த முடிவுகளின் அடிப்படையில், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ), மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.கோ) 2020 மே மாதத்தில் கோவிட் -19 நோயாளிகளுக்கு 2- டி.ஜி.யின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி அளித்தது.
டி.ஆர்.டி.ஓ, அதன் தொழில் கூட்டாளியான ஹைதராபாத்தின், டி.ஆர்.எல் நிறுவனத்துடன் இணைந்து, மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை சோதிக்க, கோவிட் -19 நோயாளிகளிடம் மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியது.

நோயாளிகள் குணமாகிறார்கள்
2020 மே-அக்டோபர் இடையே நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனைகளில் கோவிட் -19 நோயாளிகளுக்கு இந்த மருந்து பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டது மற்றும் அவர்கள் குணமடைவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பது தெரியவந்தது. இரண்டாம் கட்ட சோதனைகள், ஆறு மருத்துவமனைகளில் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட சோதனை 110 நோயாளிகளுக்கு நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications