நீட்டுக்கு விண்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை.. உதித்சூர்யாவாக செயல்பட்டது மும்பை மாணவர்!
சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை மும்பை மாணவரே உதித் சூர்யாவாக செயல்பட்டது தெரியவந்தது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்தார். இந்த நிலையில் இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமானது.
இதனால் உதித் சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசன், தாய் கயல்விழி ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இதையடுத்து கடந்த புதன்கிழமை அவர்கள் அனைவரும் திருப்பதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கேள்வி
இவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் இவர்களை தேனி மாவட்ட சிறையில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் பல்வேறு கெடுபிடிகளை தாண்டி இந்த முறைகேடு எவ்வாறு நடைபெற்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மருத்துவ படிப்பு
இதுகுறித்து வெங்கடேசனிடம் நடந்த விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் கூறுகையில் நீட் தேர்வு நடத்தும் ஏஜென்ட்டை தனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இன்னொரு மருத்துவர் சரவணன். அவரது மகனையும் இது போல் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்த்துள்ளார்.

நீட் தேர்வு
அவர் கூறிய தகவலின்பேரில் நான் நீட் தேர்வு நடத்தும் ஏஜென்ட்டை அணுகினேன். அந்த ஏஜென்ட்தான் உதித் சூர்யாவுக்கு பதில் தேர்வு எழுதும் மாணவரை தேர்வு செய்துள்ளார். அவர் மும்பைவாசி. தொழில்நுட்ப ரீதியாக மோசடிகளை கண்டுபிடிக்க முடியாத படி பெரிய அளவில் ஆள்மாறாட்டம் செய்துள்ளார்.

சிபிசிஐடி
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தது முதல் மருத்துவ சேர்க்கை வரை போலி உதித் சூர்யாவே சென்றுள்ளார். ஆனால் வகுப்புகளுக்கு மட்டும் உண்மையான உதித் சூர்யா சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். சரவணனின் மகன் பிரவீனும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications