நீட்டுக்கு விண்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை.. உதித்சூர்யாவாக செயல்பட்டது மும்பை மாணவர்!
சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை மும்பை மாணவரே உதித் சூர்யாவாக செயல்பட்டது தெரியவந்தது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்தார். இந்த நிலையில் இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமானது.
இதனால் உதித் சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசன், தாய் கயல்விழி ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இதையடுத்து கடந்த புதன்கிழமை அவர்கள் அனைவரும் திருப்பதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கேள்வி
இவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் இவர்களை தேனி மாவட்ட சிறையில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் பல்வேறு கெடுபிடிகளை தாண்டி இந்த முறைகேடு எவ்வாறு நடைபெற்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மருத்துவ படிப்பு
இதுகுறித்து வெங்கடேசனிடம் நடந்த விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் கூறுகையில் நீட் தேர்வு நடத்தும் ஏஜென்ட்டை தனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இன்னொரு மருத்துவர் சரவணன். அவரது மகனையும் இது போல் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்த்துள்ளார்.

நீட் தேர்வு
அவர் கூறிய தகவலின்பேரில் நான் நீட் தேர்வு நடத்தும் ஏஜென்ட்டை அணுகினேன். அந்த ஏஜென்ட்தான் உதித் சூர்யாவுக்கு பதில் தேர்வு எழுதும் மாணவரை தேர்வு செய்துள்ளார். அவர் மும்பைவாசி. தொழில்நுட்ப ரீதியாக மோசடிகளை கண்டுபிடிக்க முடியாத படி பெரிய அளவில் ஆள்மாறாட்டம் செய்துள்ளார்.

சிபிசிஐடி
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தது முதல் மருத்துவ சேர்க்கை வரை போலி உதித் சூர்யாவே சென்றுள்ளார். ஆனால் வகுப்புகளுக்கு மட்டும் உண்மையான உதித் சூர்யா சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். சரவணனின் மகன் பிரவீனும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications