தீர்மானம் தானே கூடாது.. "இதுக்கு" தடை இல்லையே! இபிஎஸ் பலே திட்டம்.. இன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்திற்கு பதிலாக வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நாளில் இருந்து, ஒற்றைத் தலைமை பற்றிய பேச்சு எழுந்தது. இது அதிமுக மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் உச்சத்தை எட்டியது. இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பில் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். கடந்த 9 நாட்களாக இரு தரப்பிலும் பல்வேறு ஆலோசனை கூட்டங்களிலும், சந்திப்புகளையும் நடத்தினர். இதன் இறுதியில் எடப்பாடி பழனிசாமி பக்கம் அதிமுக மூத்த நிர்வாகிகளும், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும் இருந்தனர்.

ஓபிஎஸ் மேல்முறையீடு
இந்தக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து தலைமை நீதிபதியின் அனுமதியுடன் இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் நேற்று நள்ளிரவு விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற தீர்ப்பு
விடிய விடிய நடந்த மேல்முறையீடு வழக்கில், இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பில் காரசார வாதங்கள் நடைபெற்றது. பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பலத்தை காட்ட திட்டம்
இந்தநிலையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த இபிஎஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து முக்கிய நிர்வாகிகள் முன்னிலையிலும், எடப்பாடி பழனிசாமி தனக்கான ஆதரவு இருப்பதை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விவாதம் நிச்சயம்
இதனைத்தொடர்ந்து ஒற்றைத் தலைமை பற்றியும், பொதுச் செயலாளர் பதவி குறித்தும் விவாதம் நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யலாமா என்று வாக்கெடுப்பு நடத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்புடன் நீதிமன்றத்தை அணுக எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications