சாலையில் இபிஎஸ்.. சட்டமன்றத்தில் ஓபிஎஸ்! கண்டிப்பாக செய்து தர்றோம்..துரைமுருகன் சொன்ன பதில்!
சென்னை : தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கைதான நிலையில், அதிமுக எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற கேள்வி நேரத்தில் கலந்து கொண்டார்.
பல்வேறு விவகாரங்கள் அரசியல் சிக்கல்களுக்கு இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
நேற்று இரண்டாவது நாளாக காலை 10 மணிக்கு அவை கூடிய நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், சபாநாயகர் அப்பாவுவுக்கு கடும் மோதல் எழுந்தது. எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசிக் கொண்டிருக்க ஓபிஎஸ்ஸோ அமைதியாக அமர்ந்திருந்தார்.

இருக்கை விவகாரம்
சபாநாயகர் அப்பாவு இருக்கை ஒதுக்கீடு விவகாரத்தில் யாருக்கு சாதகமாக நடந்து கொள்வார் என்பது பெரிய எதிர்பார்ப்பு நிலையில், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்சை அங்கீகரித்தார் சபாநாயகர் அப்பாவு. மேலும், எதிர்க்கட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களின் இருக்கைகளும் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனை காரணம் காட்டி அமளியில் ஈடுபட்டதால் இபிஎஸ் அணியினர் வெளியேற்றப்பட்டனர்.

ஓபிஎஸ்
இந்நிலையில் சட்டமன்றத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ஓபிஎஸ் ஒன்றுமே தெரியாதது போல் சபை நடவடிக்கைகள் முடிந்தது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக திமுக தலைவரும், அவரது பேச்சைக் கேட்டு சபாநாயகரும் செயல்படுவதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.மேலும் இது தொடர்பாக அனுமதி கேட்டு காவல்துறையிலும் மனு அளிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் போராட்டத்துக்கு சட்டம் ஒழுங்கை காரணம்காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் கருப்புச் சட்டை அணிந்து வந்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயக்குமார், கே.பி.முனுசாமி நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் ஆகியோர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கொந்தளித்த இபிஎஸ்
இதையடுத்து சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் அவர்களை வைத்து வைக்க போலீசார் ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் செய்தியாளர்களிடம் மிகவும் ஆவேசமாக பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ் - ஸ்டாலின் சட்டமன்ற கூட்டம் முடிந்த பிறகும் பேசிக் கொண்டிருந்ததாகவும் அதிமுகவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்துடன் ஸ்டாலின் கரம் கோர்த்திருப்பதாக ஆவேசமாக பேசினார். சில நேரங்களில் பேசவே முடியாத அளவுக்கு அதிக கொந்தளிப்போடு காணப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

சட்டசபை நிகழ்வுகள்
அதே நேரத்தில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை செயின் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேற்று போலவே ஓ.பன்னீர்செல்வம் எந்த வித சலனமும் இன்றி சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்றார். அவரது ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினரான ஐயப்பனும் சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று இருந்தார். தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்ற நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதில் அளித்துக் கொண்டிருந்தனர்.

துரைமுருகன்
அப்போது எழுந்த எம்எல்ஏ ஐயப்பன் தனது தொகுதியில் காங்கிரீட் கால்வாய் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை உறுப்பினர் கேள்வியாக எழுதி கொடுத்திருந்தால் நிச்சயம் செய்து வந்திருப்பேன் எனக் கூறிய அமைச்சர் துரைமுருகன் ஒன்றும் பிரச்சனை இல்லை எதுவாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது என்றால் நிச்சயம் செய்து தருவோம் என பதிலளித்தார். அதிமுக தரப்பில் மற்ற எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் மட்டும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications