புதிய கல்விக்கொள்கையால் தாய்மொழி பயன்பாடு அதிகரிக்கும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
சென்னை: புதிய கல்விக் கொள்கையில் கல்வியை வட்டார மொழிகளில் கற்பது குறித்து வலியுறுத்தப்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்து 76வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது. இதனால் முந்தைய ஆண்டுகளை விடவும், நடப்பு ஆண்டு சுதந்திர தினத்தை மக்கள் பண்டிகை போல் கொண்டாடி வருகின்றனர். இல்லங்கள் தோறும் தேசியக் கொடி என்று எங்கு பார்த்தலாலும், தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் பேரணி, விழிப்புணர்வு என்று கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.

ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு
அதேபோல் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றினார். இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், நாடு விடுதலை பெற்று 76வது சுதந்திர ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்திய சுதந்திரத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை போற்ற வேண்டும். கொரோனா பரவலின் போது சுகாதாரத்துறை செயல்பாடுகள் அளவிட முடியாதவை. அதேபோல் விவசாயிகளுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

தமிழக வீரர்களுக்கு பாராட்டு
தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச விளையாட்டுகளான காமன்வெல்த் போட்டிகள், செஸ் ஒலிம்பியாட், ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் சாதித்த பவானி தேவி, மாரியப்பன் தங்கவேலு, ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், பிரஞ்ஞானந்த உள்ளிட்ட அனைத்து வீரர்களும் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெயர் பெற்று கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

தமிழக முன்னேற்றம்
கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம், மனிதவளம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டில் கல்வித்துறை தரப்பில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. ஆனால் உயர் கல்வியில் இன்னும் வேகமாக முன்னேறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நாம் செயல்படுத்த வேண்டும்.

புதியக் கல்விக்கொள்கை
காலனியாதிக்கக் கல்வி முறையின் வழியில், வெற்றுப் பட்டதாரிகளையும் மனப்பாடத் திறனையும் மட்டுமே உருவாக்குகிற கல்வித் திட்டம் செயல்பட்டது. நம்முடைய கல்வித் திட்டத்தை நவீனப்படுத்தும் புரட்சிகர முன்னெடுப்பே, தேசியக் கல்விக் கொள்கை 2020 ஆகும்.
புதிய கல்விக் கொள்கையில் கல்வியை வட்டார மொழிகளில் கற்பது குறித்து வலியுறுத்தப்படுகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் தமிழ் மொழியின் பயன்பாட்டை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது என்றும், மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் தமிழை அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கு இதுவே நேரம், சரியான நேரம் என்று தெரிவித்துள்ளார்.
-
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications