குஜராத் இமாலய வெற்றி.. பாஜக நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு.. மோடிக்கு வாழ்த்துச் சொன்ன ஓபிஎஸ், ஈபிஎஸ்!
சென்னை : குஜராத்தில் அமோக வெற்றி பெற்று ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கவிருக்கும் பாஜகவுக்கு அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் 156 இடங்களில் வென்று பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது. அம்மாநிலத்தில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறார் பூபேந்திர படேல்.
இந்நிலையில், குஜராத்தில் பாஜக பெற்றுள்ள இமாலய வெற்றி குறித்து பதிவிட்டுள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடே எதிர்பார்த்த குஜராத் முடிவு
குஜராத் சட்டமன்றத் தேர்தல் நாடெங்கிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா இருவரின் சொந்த மாநிலம் குஜராத். அது மட்டுமல்லாமல் பிரதமர் மோடி பிரதமராவதற்கு முன்னர் குஜராத்தில் முதல்வராகப் பதவி வைத்தவர். பாஜக, குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. அந்த வகையில் குஜராத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது.

மும்முனை மோதல்
குஜராத்தில் இந்த முறையும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமாக களம் இறங்கி இருந்தது பாஜக. காங்கிரஸ் கட்சி, பாஜக கோட்டையைத் தகர்க்க களமிறங்கிய நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் குஜராத்தில் தீவிரமாக இறங்கியது. டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்தில் தங்களது தடத்தைப் பதிக்க நினைத்தது ஆம் ஆத்மி. இதனால் குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி இருந்தது.

குஜராத் வெற்றி
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி மற்றும் 7ஆம் தேதி என்று இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பாஜக, குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் வெற்றி பெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் குஜராத்தில் ஏழாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கிறது பாஜக. பாஜகவின் இந்த குஜராத் வெற்றியை நாடங்கிலும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

2024 தேர்தலுக்கு முன்னோட்டம்
குஜராத்தில் தற்போது பாஜக பெற்றிருக்கும் வெற்றி பாஜகவின் முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்திருக்கிறது. வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த குஜராத் தேர்தல் வெற்றியைச் சுட்டிக் காட்டுகின்றனர் பாஜகவினர். இந்த நிலையில் குஜராத் தேர்தலில் பாஜக வென்றிருப்பதால் பாஜகவிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கூட்டணி கட்சி தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் வாழ்த்து
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குஜராத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றிக்காக பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மோடி - அமித்ஷா - நட்டா
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு பாஜக குஜராத்தில் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மிக அதிக இடங்களில் வெற்றி பெற்று குஜராத் மாநிலத்தில் எந்த சட்டமன்றத் தேர்தலிலும் இல்லாத வகையில் அதிக இடங்களை வென்று தொடர்ந்து ஏழாவது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்கு வாழ்த்துகள், இது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்திருக்கிறார்.

மோடி மீதான நம்பிக்கை
அதேபோல அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "குஜராத் சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து ஏழாவது முறையாக பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பது பிரதமர் மீது இருக்கும் மாநில மக்களின் நம்பிக்கையை தெளிவுபடுத்துகிறது. இந்த வரலாற்று வெற்றிக்காக பிரதமர் நரேந்திரமோடிஜிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications