எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக தொண்டர்களைக் காக்க உன்னத தலைவர் வந்துவிட்டார்.. உருகிய வளர்மதி
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக தொண்டர்களைக் காக்க உன்னத தலைவர் வந்துவிட்டார் என்றும், தொண்டர்களே அஞ்சாதீர்கள், நம்மைக்காக்க எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கிய நிலையில், சென்னை உயா் நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு 9.15 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிரந்தர பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த 4 மாதங்களுக்கு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களே என்று பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து, தூய உள்ளம் படைத்தவர்களுக்குத்தான் இறைவன் அருள் இருக்கும். வஞ்சக உள்ளம் படைத்தவர்களை இறைவன் தூரத்தில் வைப்பார்.
மாறாத ஜென்மங்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களை பற்றி பேச விரும்பவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக தொண்டர்களைக் காக்க உன்னத தலைவர் வந்துவிட்டார். தொண்டர்களே அஞ்சாதீர்கள், நம்மைக்காக்க அண்ணன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications