Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛உண்மையின் கதைகள்’.. அமெரிக்காவின் தேசிய மொழிப்பெயர்ப்பு விருதுக்கு ஜெயமோகனின் கதை தேர்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவில் மொழிப்பெயர்ப்பு தேசிய விருதுக்கான இறுதிப்போட்டிக்கு தமிழ், மலையாளத்தில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட கதைகள் தேர்வாகி உள்ளது.

ஒவ்வொரு மொழிகளிலும் கதை, கவிதைகளை எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். இத்தகைய கவிதை, கதைகள் வெவ்வேறு மொழிகளிலும் பிற நாட்டை சேர்ந்தவர்கள் படிக்கும் வகையில் உரிய அனுமதியுடன் மொழிப்பெயர்க்கப்பட்டு வருகிறது.

Fiction originally written in Tamil and Malayalam this years finalists for National Translation Awards in US

இப்படி மொழிப்பெயர்ப்பு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவில் தேசிய மொழிப்பெயர்ப்புக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த தேசிய விருதுக்கு வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மொழிப்பெயர்ப்பு எழுத்தாளர்களின் கதை, கவிதைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் இருந்து கதை மற்றும் கவிதை மொழிப்பெயர்ப்பு பிரிவுகளில் தனித்தனியே 6 பேர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான லிஸ்ட்டை அமெரிக்க இலக்கிய மொழிப்பெயர்ப்பாளர் சங்கம் நேற்று அறிவித்தது. ஒவ்வொரு பிரிவுகளில் வெற்றி பெறும் மொழிப்பெயர்ப்பு எழுத்தாளர்களுக்கு 4 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது.

நேற்றைய தினம் வெளியான இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் தமிழ், மலையாள மொழிகளிலிருந்து மாற்றப்பட்ட மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றுள்ளன. அதாவது தமிழில் பி ஜெயமோகன் எழுதிய ‛உண்மையின் கதைகள்' என்பதை மொழிப்பெயர்த்த பிரியம்வாதா ராம்குமார் மற்றும் ஷீலா டோமியின் Valli-யை மலையாளத்தில் இருந்து மொழிப்பெயர்த்த ஜெயஸ்ரீ காலம் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் வியட்நாம் மொழியில் இருந்து தான்ஸ் நாவலான ‛சின்னடவுன்' என்பதை மொழிப்பெயர்த்ததற்காக என்குன் அன் லை, மிகோல்ஜ் கன்பெர்க்கின் ‛ஐ வூட் லைக் டூ சே சாரி, பட் தியர் நோ ஒன் டூ சே சாரி டூ' நாவலை போலிஸ் மொழியில் இருந்து மொழிப்பெயர்த்த சீன் கஷ்பர் பை, மோனிக்யூ இல்பவ்டூவின் ‛சோ டிஸ்டென்ட் ப்ரம் மை லைப்' எனும் நாவலை பிரெஞ்சு மொழியில் இருந்து மொழிப்பெயர்த்த யாரி காமரா ஆகியோரும் இறுதிப்போட்டியில் உள்ளனர்.

Fiction originally written in Tamil and Malayalam this years finalists for National Translation Awards in US

அதேபால் கவிதை மொழிப்பெயர்ப்பு பட்டியலில் மறைந்த நோபல் பரிசு பெற்ற நெல்லி சாக்ஸின் Flight and Metamorphosis எனும் தொகுப்பை ஜெர்மன் மொழியில் இருந்து மொழிப்பெயர்த்த லிண்டா பி. பார்ஷல், ஜோசுவா வெய்னர் இடம் பெற்றுள்ளனர். இதுமட்டுமின்றி கிரேக்க மொழியில் இருந்து Phoebe Giannisi's Cicada, சீன மொழியில் இருந்து Wong May மொழிப்பெயர்ப்புக்காக பிரியன் ஸ்னீடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அரபி மொழியில் இருந்து இமான் மெர்சலின் The Threshold மொழிப்பெயர்ப்புக்காக கிரீஸ்வெல், பிரெஞ்சு மொழியில் வீணஸ் கவுரி-கட்டாவின் The Water People மொழிப்பெயர்ப்புக்காக மரிலின் ஹேக்கர், அதேபோல் பிரெஞ்ச் மொழியில் இருந்து ஆனந்த்தா தேவியின் When the Nigt Agrees to Speak to Me எனும் மொழிப்பெயர்புக்காக காசிம் அலி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இப்படி கதை மற்றும் கவிதை மொழிப்பெயர்ப்புக்கு தனித்தனியே தேர்வு செய்யப்பட்டுள்ள மொழிப்பெயர்ப்பாளர்களில் வெற்றி பெற்றவர் யார்? என்பது நவம்பர் 11ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. *****

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+