ஒரே காது வலி.. மருத்துவமனை சென்ற ப்ளஸ் 1 மாணவி திடீர் பலி.. சென்னையில் ஷாக்.. என்னாச்சு?
காது வலிக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அபிநயாவை அவரது தாயார் நந்தினி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, காது பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த மருத
சென்னை: காது வலிக்காக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற ப்ளஸ் 1 மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் திருவொற்றியூரில் பெரும் சோகத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தவறான சிகிச்சையால்தான் மாணவி உயிரிழந்ததாக கூறி அவரது பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதாரண காது வலிக்காக சென்ற மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பதற வைக்கும் உயிரிழப்புகள்
சமீபகாலமாக தவறான சிகிச்சையால் மக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. காய்ச்சலுக்காக மருத்துவமனையில் ஊசி போட்ட இளைஞர் உயிரிழப்பு, பிரசவத்துக்கு சென்ற பெண்ணுக்கு பார்வை பறிபோனது போன்ற செய்திகள் ஈரக்குலையை நடுங்கச் செய்வதாக உள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் போலி மருத்துவர்களால் நிகழ்கிறதா அல்லது மருத்துவர்களின் அலட்சியப்போக்கால் நிகழ்கிறதா என சந்தேகங்களை எழுப்புகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் சென்னையில் நடந்திருக்கிறது.

அடிக்கடி காது வலி
சென்னையை அடுத்த திருவொற்றியூரை சேர்ந்தவர் நந்தினி. இவரது மகள் அபிநயா (16), ராயபுரத்தில் இயங்கும் தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வருகிறார். இவருக்கு சிறு வயது முதலாகவே காது வலி இருந்து வந்துள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக தாங்க முடியாத அளவுக்கு அவருக்கு காது வலி ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் படிப்பிலும் அபிநயாவால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை.

அறுவை சிகிச்சை
இந்நிலையில், இந்த காது வலிக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அபிநயாவை அவரது தாயார் நந்தினி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, காது பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்தால்தான் காது வலியை சரிசெய்ய முடியும் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 15-ம் தேதி மாணவி அபிநயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அன்றைய தினம் இரவு அபிநயாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில், அறுவை சிகிச்சை முடிந்ததும் அபிநயாவுக்கு திடீரென இதயத் துடிப்பு அதிகமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பரிதாபம்
இதையடுத்து, வேறொரு தனியார் மருத்துவமனையில் அபிநயா அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது இதயத் துடிப்பு சீராகவில்லை. அதன் பின்னர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிநயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும், பொதுமக்களும் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போலீஸார் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், சிகிச்சை அளித்த மருத்துவர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications