தங்க நெக்லஸுக்காக ஆடையை உருவி சோதனை.. இரவெல்லாம் கதறியழுத கேரளா பணிப்பெண்! ஓடிவந்த மனித உரிமை ஆணையம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்கள், சில சமயம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுவிடுகிறார்கள்.. 4 நாட்களுக்கு முன்புகூட, போபாலில் ஒரு தொழிலதிபர் வீட்டில் நகைகள், பணத்தை திருடிய பணிப்பெண் ரகசிய கேமராக்கள் மூலம் கையும் களவுமாக மாட்டினார்.. ஆனால், எத்தனையோ வீடுகளில் விசுவாசத்துடன் வேலை பார்க்கும் பல பணிப்பெண்கள் இருக்கவே செய்கிறார்கள்.. இது தெரியாமல் வீட்டு வேலை செய்கிறார்கள் என்பதற்காகவே, அவர்கள் மீது திருட்டு பழி போடுவது ஏற்க முடியாத ஒன்று. அப்படித்தான் கேரளாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட தலித் பெண்ணுக்காக, மனித உரிமை ஆணையம் குரல் எழுப்பி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு சுள்ளிமானூர் என்ற பகுதியில் வசித்து வருகிறார் அந்த 39 வயது பெண்.. வறுமை காரணமாக, பேரூர் கடையில் இஷா என்பவர் வீட்டில் வேலை பார்த்து வந்தார்..

Gold necklace Kerala Human Rights commission

கடந்த 13-ந் தேதி வேலை முடிந்ததும் வீட்டிற்கு இந்த பெண் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டார்.. அப்போது, தன்னுடைய வீட்டில் தங்க நகை காணவில்லை என்றும், வீட்டுவேலை செய்யும் பணிப்பெண் மீதுதான் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர் பேரூர் கடை போலீசுக்கு தந்துள்ளார்..

திடீரென வந்த போன்

இதையடுத்து, வீட்டுக்கு செல்ல பஸ்ஸுக்காக காத்திருந்த பணிப்பெண்ணுக்கு போன் செய்துள்ளார்கள்.. நீங்கள் வேலை செய்யும் வீட்டில் 5 பவுன் தங்க சங்கிலி திருடு போய்விட்டது. உங்கள் மீதுதான் சந்தேகம் உள்ளது. அதனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Gold necklace Kerala Human Rights commission

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணும், உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றிருக்கிறார்.. "நான் எந்த நகையையும் திருடவில்லை, என்னை நம்புங்கள்" என்று பலமுறை விளக்கம் தந்துள்ளார் அந்த பெண்.. ஆனால், அங்கிருந்த மகளிர் போலீசாரோ, அப்பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை செய்திருக்கிறார்கள். நகை எதுவுமே அப்பெண்ணிடம் இல்லை.. அப்போதும் அவரை விடுவிக்காமல், இரவு முழுவதும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.. அந்த பெண்ணுக்கு சாப்பாடும் தரவில்லை.. குடிக்க தண்ணீர் கேட்டும் தரவில்லையாம்.

மிரட்டி திட்டி அனுப்பினர்

மறுநாள் திருடுபோன தங்க நகை கிடைத்து விட்டதாக பேரூர் கடை போலீசாருக்கு, புகார் தந்தவரே கூறியிருக்கிறார். ஆனால், இந்த விவரத்தையும் அப்பெண்ணுக்கு போலீசார் சொல்லவில்லை. அதற்கு பதிலாக, விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் வர வேண்டும் என்று திட்டி அனுப்பி வைத்திருக்கிறார்கள். வீட்டிற்கு வந்தபிறகுதான், காணாமல் போன நகை திரும்ப கிடைத்துவிட்டது என்ற விஷயமே பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது..

இதனால் உச்சக்கட்ட அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இந்த சம்பவம் குறித்து முதலமைச்சருக்கும், டிஜிபிக்கும் புகார் தந்தார்.. இந்த புகார் தொடர்பாக திருவனந்தபுரம் சரக டிஐஜி விசாரணை மேற்கொண்டார்.. இறுதியில், பேரூர் கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்..

தலையிட்ட மனித உரிமை ஆணையம்

எனினும், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பெண் திருப்தி அடையவில்லை.. தன்னை நிர்வாணமாக்கி சோதனை செய்த அனைத்து போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்..

இதனிடையே, மனித உரிமை ஆணையமும் இதில் தலையிட்டிருக்கிறது.. 20 மணி நேரத்திற்கும் மேலாக போலீஸ் ஸ்டேஷனில் தலித் பெண் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரத்திற்கு வெளியே பணியாற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு கூடுதலான அதிகாரி தலைமையில் முழு விசாரணை நடத்த வேண்டும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+