Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மக்களே.. நல்ல செய்தி.. வேறலெவல் வசதிகளுடன் அடையாளமே மாறப்போகும்.. பஸ் டிப்போக்கள்

திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி, ஆகிய மூன்று பேருந்து டிப்போக்களை நவீன வசதிகளுடன் வணிக வளாகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி, ஆகிய மூன்று பேருந்து டிப்போக்களை பொதுமக்கள் - தனியார் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1543 கோடி செலவில்' நவீன வசதிகளுடன் வணிக வளாகமாக மாற்ற மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்திருக்கிறது.

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமாக பிராட்வே, திருவான்மியூர், அடையாறு, திருமங்கலம், வடபழனி, கிண்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பேருந்து நிலையங்கள் உள்ளன. இந்தப் பேருந்து நிலையங்களை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்த பேருந்து நிலையங்களில் இருந்து தான் தினசரி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனால் பயணியருக்கு போதிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத. பேருந்து நிலையங்களில் அமரும் இடம், கழிப்பறை, குடிநீர் வசதி, சுகாதாரமான இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை. மழைக் காலங்களில் பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்குவதாக உள்ளது.

வடபழனி

வடபழனி

இந்நிலையில் சென்னையில் உள்ள திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி, ஆகிய மூன்று பேருந்து டிப்போக்களை ரூ.1543 கோடி செலவில்' வணிக வளாகமாக மாற்ற மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்திருக்கிறது. திருவான்மியூர் பஸ் டிப்போ ரூ.446 கோடி மதிப்பிலும், வடபழனி பஸ் டிப்போ ரூ.610 கோடி மதிப்பிலும், வியாசர்பாடி பஸ் டிப்போ ரூ.485 கோடி மதிப்பிலும் நவீன மயமாக்கப்படள்ளது. பல்வேறு வசதிகளுடன் கூடிய வணிக வளாகமாக மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தரைத்தளம்

தரைத்தளம்

பொதுமக்கள், தனியார் பங்களிப்பு என்ற முறையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநகர் போக்குவரத்துக் கழகம் டெண்டர் கோரி இருக்கிறது. இந்த பேருந்து நிலையங்களில், தரைத் தளம் மற்றும் முதல் தளம் பேருந்துகளை நிறுத்துவதற்கான இடமாக இருக்குமாம். 2-வது தளம் பேருந்து டிப்போ மற்றும் வணிகக் கடைகள் இருக்கும் தளமாக இருக்குமாம். மீதம் உள்ள தளங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்கள் உள்ள தளமாக அமைக்கப்பட உள்ளதாம்.

நவீன கழிப்பறை

நவீன கழிப்பறை

இந்த பேருந்து நிலைய வணிக வளாகங்களில் தியேட்டர், உள் அரங்க விளையாட்டுகள், கூட்ட அரங்கம் போன்றவை அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்காத வகையிலும், மழைநீர் வடிகால் வசதியுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள், நவீன கழிப்பறைகள் போன்றவை அமைக்கப்பட உள்ளதாம்.

சென்னை மாநகர்

சென்னை மாநகர்

இந்த திட்டம் மூலம் பேருந்து நிலையங்கள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். பயணிகளுக்கு தரமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும். மேலும் பேருந்து நிலையங்களை வணிக வளாகங்களாக மாறுவதால், பேருந்துக்காக காத்திருக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்தே இந்த முடிவினை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எடுத்திருக்கிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+