சல்லிக்காசு இல்லை.. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாதா? 3 மாசத்தில் நிலைமை மோசமாகும்.. யார் பாருங்க
சென்னை: ஒரு அரசு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக, தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன என்றும், ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்தால் தான், தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சியில், தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்... அப்போது, வழக்கம்போல், விசிக திருமாவளவனையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பும் எச்.ராஜா, சமீபகாலமாகவே, ஆட்சியில் பங்கு கேட்டும் திருமாவின் கோரிக்கைக்கு ஆதரவு தந்து வருகிறார். திருமாவின் கோரிக்கை நியாயமானதே என்றும் வரவேற்று வருகிறார்.

பாஜக ஆட்சி: எச். ராஜா பேசும்போது, "3-வது முறையாக ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைய போகிறது.. தேர்தலில் வெற்றியை பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்த காங்கிரஸ் கூட்டணிக்கு, இதன்மூலம் தக்க பதிலடி தரப்பட்டுள்ளது..
ஒரு அரசு எப்படியெல்லாம் ஏற்பாடு செய்யக்கூடாது என்பதற்கு ஒரு அடையாளமாக சென்னை மெரினாவில் நடைபெற்ற ஏர் ஷோ நடந்துள்ளது. இந்த அரசால் மக்களுக்கு குடிநீர் கூட தரமுடியவில்லை. தன்னுடைய நண்பர்கள் நலனுக்காக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது கார் பந்தயம் நடப்பதற்கு முன்னேற்பாடுகளை தொடர்ந்து கவனித்த உதயநிதி, துணை முதல்வராக பதவியேற்ற பிறகு தன்னுடைய பணியை மறந்துவிட்டார். தமிழக போலீஸார் இதுவரையிலும் எந்த ஒரு பயங்கரவாதிகளையும் கைது செய்யவில்லை.
காவல்துறை: கஞ்சாவை தவிர வேறெந்த போதைப் பொருளையும் தமிழக காவல்துறை பிடித்ததாக தெரியவில்லை. எந்த வகையிலும் தோற்றுப்போன அரசாக திமுக ஆட்சி உள்ளது. 2026-ல் மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் கேட்டது நியாயம். ஆனால் கூட்டணிக்கு மட்டும் தான் கட்சிகள் தேவை.
அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. ஆனால், அரசின் கஜானாவை காலி செய்துவிட்டு அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில் தற்போது தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம்போட முடியாத நிலைமை தமிழகத்தில், அடுத்த 3 மாதத்தில் உருவாகும், நிர்வாக திறன்மையின்மைக்கு மத்திய அரசு குறைசொல்வதை ஏற்கமுடியாது.
ஆர்எஸ்எஸ்: அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன். அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும். ஆர்எஸ்எஸ் வளர்ந்தால்தான் தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். சமூக நீதி வேண்டும் என்றால் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். திமுக என்பது இந்து விரோத அமைப்பு தான். அதன் இந்து விரோத கொள்கைகள் மாறாது." என்றார்.












Click it and Unblock the Notifications