பேரிடர் மீட்பு பணியில் உள்ள அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது... அரசு வலியுறுத்தல்!
Recommended Video

சென்னை: கஜா புயல் 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் கடலூர் பாம்பன் இடையே புயல் நவம்பர் 15ம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையின் அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : கஜா புயலினை எதிர்கொள்ள மேற்கொண்டிருக்கக் கூடிய முன்எச்சரிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

உடனடியாக அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அந்த மாவட்டத்திற்கு சென்று பொறுப்பேற்க வேண்டும். மருத்துவர்கள் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும், பால் விநியோகம் சீராக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் ஜெனரேட்டர்கள் அமைக்க வேண்டும், நடமாடும் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்.
நவம்பர் 15 அன்று கனமழை வாய்ப்பு இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மழை நிலவரத்திற்கு ஏற்ப முடிவு எடுத்துக்கொள்ளலாம். களத்தில் முதல்நிலைப் பணியில் இருப்பவர்கள் விடுமுறைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் அறிவுரை அளித்துள்ளார்.
பேரிடர் காலங்களில் ஆதாரமற்ற செய்திகளை யாரேனும் வெளியிட்டால் அதனை நம்ப வேண்டாம். 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கும் அவர்கள் தரக்கூடிய அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே வெளியிடுங்கள்.

புயல் காற்றின் போது பொதுமக்கள் வாகனங்களில் செல்ல வேண்டாம். பேரிடர் காலத்தில் அரசு கொடுக்கும் எச்சரிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். கஜா புயல் 3 முறை திசை மாறி இருக்கிறது, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
[கஜா புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஆயத்தம்.. கடலோர காவல்படை கப்பல்கள் வருகை]
தற்போதைய நிலவரப்படி கடலூர் - பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வானிலை எச்சரிக்கையானது 12 மணிக்கு வரும் அதனை பொருத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் கடலூர் - பாம்பன் இடையே கரையை கடக்கலாம் என்பதால் இதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications