தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணியில் 20% இட ஒதுக்கீடு -ஆளுநர் ஒப்புதல்
சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20 % இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 8 மாதங்களாக இந்த சட்ட மசோதா கிடப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதன் மூலம் தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் 20 % இட ஒதுக்கீடு கிடைக்கக் கூடும்.

ஆளுநர் ஒப்புதல்
பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, பட்டப்படிப்பிற்கு முன்பு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளையும், 10-ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் கேள்வி
சட்டத் திருத்த மசோதாவிற்கு ஏறக்குறைய 8 மாதங்களாக, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் இது குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் ஆளுநர் 20% இட ஒதுக்கீடு சட்டமசோதாவிற்கு ஒப்புதல் தராவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனக் கூறியிருந்தார்.

தமிழ் வழிக்கல்வி
இந்நிலையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20 % இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சட்டமசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதன் மூலம் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.

சாதகமான சூழல்
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக அரசுக்கு இது பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. தேர்தல் பரப்புரையின் போது இந்த நடவடிக்கைகளை எடுத்துக்கூறி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் வாக்குக் கேட்க ஏதுவான சூழல் உருவாகியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications