பெரியார் இருக்க சவார்க்கர் ஏன்? தமிழகத்தில் குஜராத் மாடலை நம்பாதீங்க! போட்டு தாக்கிய ஜிக்னேஷ் மேவானி
சென்னை : தமிழகத்தில் பாஜக வர வேலை மற்றும் கடுமையான முயற்சி செய்கிறார்கள், அவர்களை வர விடாதீர்கள் எனவும், குஜராத் மாடலை ஏற்றுக்கொள்ளாதீர்கள் அதன் கொடுமை தங்களுக்கு நன்றாக தெரியும் என குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலினத்தவர் பிரிவின் சார்பாக 'தலித் உண்மைகள்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டார்.
36 ஆயிரம் கோயில்களை முகலாயர்கள் அழித்தனர்.. அனைத்தையும் மீட்போம்.. சூளுரைக்கும் பாஜக ஈஸ்வரப்பா
ஜிக்னேஷ் மேவானி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஜிக்னேஷ், " ஒரு தலித் இல்லாத சாதியினர் தீண்டாமையை பின்பற்றும் போது அவர்களின் கஷ்டம் தெரியும்.
தமிழகத்தில் பாஜக
மதம் மற்றும் சாதி ஒன்றிணைந்த ஒன்று. அதை எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் பாஜக வர வேலை மற்றும் முயற்சி செய்கிறார்கள். அவர்களை வர விடாதீர்கள், குஜராத் மாடலை ஏற்றுக்கொள்ளாதீர்கள். அதன் கொடுமை தங்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் தமிழகத்திற்கு சாவர்கார் தேவையில்லை, பெரியாரை கொண்டாடுங்கள்.
குஜராத் மாடல் தேவையில்லை
தமிழகத்தில் பாஜக காலூன்ற வேகமாக செல்கிறது என்றும் தமிழகத்தில் பாஜக தேவையில்லை. தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் என்றும் அந்த மாடலை தங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் அதன் கொடுமை தெரிந்ததால்தான் இதனை நாங்கள் கூறுகிறோம். சாதி மிகவும் கடினமான ஒன்று.
முழு சர்வாதிகார இயக்கம்
சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு படிநிலையும் அழிக்கும் ஒன்று. பிஜேபி மற்றும் ஆர்.எஸ். எஸ் இயக்கம் முழு சர்வாதிகார இயக்கம். தலித் மக்களை காப்பதற்கு நாம் அனைத்தையும் செய்ய வேண்டும். இது நமக்கு ஒரு சவால். தலித் இயக்கம் பல விதங்களில் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். அவர்களின் இயக்கம் மிகவும் முக்கியமான ஒன்று" என அவர் கூறினார்.