Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

14 ஆண்டில் அதிகபட்சம்.. மழையில் “ரெக்கார்டு” வைத்த சீர்காழி! தமிழ்நாட்டின் பெருமழை பட்டியல் விபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை நேரத்தில் நாகை அருகே கரையை கடந்த நிலையில், தமிழ்நாடு கடலோர பகுதிகளில் 7 ஆண்டுகளில் அதிகபட்ச கனமழையாக சீர்காழியில் 43 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தற்போது இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து உள் தமிழகத்தில் நீடிக்கிறது. இந்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 43 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 37 சென்டி மீட்டர் மழையும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 27 சென்டி மீட்டர் மழையும், காரைக்காலில் 11 சென்டி மீட்டர் மழையும், கடலூரில் 9 சென்டி மீட்டர் மழையும், சென்னை, கோவை, புதுச்சேரியில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

5 ஆண்டுகளில் அதிகபட்சம்

5 ஆண்டுகளில் அதிகபட்சம்

இதில் சீர்காழியில் கொட்டித்தீர்த்த கனமழை கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பொழிந்த அதிகபட்ச மழையாக பார்க்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு பதிவான அதித மழைப்பொழிவாக நவம்பர் மாதம் 10ம் தேதி நாகப்பட்டினம் மற்றும் திருப்பூண்டியில் பொழிந்த 31 சென்டி மீட்டர் மழை பார்க்கப்படுகிறது.

2020 மழை

2020 மழை

அதே ஆண்டு காரைக்காலில் 29 சென்டி மீட்டர், நவம்பர் 26 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 சென்டி மீட்டர் மழை பொழிந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு பெய்த அதீத மழைப்பொழிவாக டிசம்பர் 4 ஆம் தேதி கொள்ளிடத்தில் 36 சென்டி மீட்டர் மற்றும் சிதம்பரத்தில் 34 சென்டி மீட்டர் மழை பெய்தது.

பாபநாசம்

பாபநாசம்

அதே ஆண்டு நவம்பர் 26 ம் தேதி புதுச்சேரியில் 30 சென்டி மீட்டர் மழையும், கடலூர் 28 சென்டி மீட்டர் மழையும் பொழிந்தது. கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அதிக மழைப்பொழிவு நிகழ்வு பதிவாகவில்லை. 2017 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 45 சென்டி மீட்டர் பெய்த மழை அதிக மழையாக பார்க்கப்படுகிறது.

வர்தா புயல்

வர்தா புயல்

அதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டு வர்தா புயல் காரணமாக சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 33 சென்டி மீட்டர் மழைப்பொழிந்தது அதிகபட்ச மழைப் பொழிவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் கடந்த 2015 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் ஒரே நாளில் 49 சென்டி மீட்டர் மழையும், நெய்வேலியில் 48 சென்டி மீட்டர் மழையும் கொட்டியது.

 ஒரத்தநாடு

ஒரத்தநாடு

2015 ஆம் ஆண்டிற்கு பிறகு கடலோர பகுதியில் பெய்த பெருமழை இதுவாகும். கடந்த 2008 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் பெய்த 66 சென்டி மீட்டர் மழைப்பொழிவே இன்று வரை தமிழக கடலோர பகுதிகள் மற்றும் டெல்டாவில் பகுதிகளில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழையாகும். அதற்கு அடுத்தப்படியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இன்று 43 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை மழை நிலவரம்

மயிலாடுதுறை மழை நிலவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை எடுத்துக் கொண்டால், சீர்காழியில் அக்டோபரில் 152 மி.மீ மழையும் நவம்பர் 334 மி.மீ என மொத்த 487.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கொள்ளிடத்தில் அக்டோபரில் 109.4 மி.மீ நவம்பர் 452.2 மிமீ என 561 மிமீ மழை பதிவாகி இருக்கிறது.

தரங்கப்பாடி

தரங்கப்பாடி


மயிலாடுதுறையில் அக்டோபர் மாதம் 180 மிமீ மழையும், நவம்பர் மாதம் 254 மிமீ மழையும் என 434 மிமீ மழை பெய்து இருக்கிறது. மணல்மேடு பகுதியில் அக்டோபர் மாதம் 115 மிமீ மழையும் நவம்பரம் மாதம் 226 மிமீ மழையும் என மொத்தம் 341 மிமீ மழை கொட்டி தீர்த்து உள்ளது. அதேபோல், தரங்கம்பாடியில் அக்டோபரில் 61 மில்லி மீட்டர் மழையும், நவம்பரில் 247 மீல்லி மீட்டரும் என 308 மிமீ மழை பொழிந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+