மூச்சை நிறுத்த துடிக்கும் இதய நோய்.. உயிருக்காக போராடும் 14 வயது சிறுமி! காப்பாற்ற உடனே உதவுங்கள்
சென்னை: அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி தமிழினியா ஆர்., மிகவும் சுறுசுறுப்பான மாணவி. கல்வியில் ஆர்வமுள்ளவளாகவும், குடும்பத்திற்காக சிறந்த வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற கனவுகளுடன் வாழும் சுட்டி சிறுமி. ஆனால் சமீபத்தில் அவளுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் உயிர் வாழ போராடி வருகிறார். அவரை காப்பாற்ற உடனே உதவுங்கள்.
MIOT மருத்துவமனையில் தமிழினியாவுக்கு பரிசோதனை நடைபெற்றது. அப்போது மருத்துவர்கள், தமிழினியாவின் இதயத துடிப்பு வித்தியாசமாக இருப்பதை கண்டறிந்தனர். ஆரம்பத்தில் சாதாரண பிரச்சனை என்று கருதப்பட்ட இது, தற்போது சிறுமியின் உயிரை பறிக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது.

மேலும் பரிசோதனைகளின் மூலம், சிறுமிக்கு ருமாட்டிக் இதய நோய் இருப்பது உறுதியாகியது. இதனால் இதயம் சரியாக ரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் போகிறது, இது மிகவும் ஆபத்தான நிலை.
மருத்துவ செலவினால் குடும்பம் திணறுகிறது
சிறுமிக்கு உடனடியாக மிட்ரல் வால்வு சரி செய்யும் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், அவளுடைய உடல் நலம் மேலும் மோசமாகி உயிருக்கு ஆபத்து ஏற்படும். MIOT மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ. 3,00,000 செலவாகும். ஆனால், சிறுமியின் குடும்பத்திற்கு இது மிகப்பெரிய தொகை.

சிறுமியின் தந்தை ராமமூர்த்தி, தினக்கூலி வேலை செய்து ஒரு நாளைக்கு ரூ. 400 சம்பாதிக்கிறார். தாய் சரஸ்வதி, வீட்டு வேலைகளை கவனிக்கிறார். அண்ணன் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து குடும்பத்திற்கு உதவுகிறார். ஆனால் அவர்களின் மொத்த வருமானம் இந்த மருத்துவ செலவுகளை சமாளிக்க போதவில்லை.

சிறுமியின் உயிரைக் காப்பாற்ற அவரது குடும்பம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனாலும், இப்போது உதவி அவசியமாகியுள்ளது. உங்கள் உதவி மூலம் சிறுமி அறுவை சிகிச்சையை முடித்து மீண்டும் பள்ளிக்கு சென்று தனது கனவுகளை நனவாக்க முடியும். உங்கள் உதவி சிறியதாக இருந்தாலும் அல்லது பெரியதாக இருந்தாலும், அது அவளுக்கு புதிய வாழ்க்கையை வழங்கும். எனவே உடனே உதவுங்கள். சிறுமியின் உயிரை காப்பாற்றுங்கள்.












Click it and Unblock the Notifications