“ஒரே போடு.. உடனடி மாற்றம்” இதுல திமுகவை அடிச்சிக்க முடியுமா? - திரும்பிப் பார்க்க வைத்த எம்.பி!
சென்னை: ரயில்வே இணையதள பக்கங்களில் திவ்யங்ஜன் எனும் இந்தி வார்த்தை இருப்பதை ஆங்கிலத்தில் மாற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி கோரிக்கை விடுத்தார்.
தி.மு.க எம்.பி செந்தில் குமாரின் கோரிக்கையை ஏற்று அந்த வார்த்தை ஆங்கிலத்தில் மாற்றப்படும் என மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளை தி.மு.க தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், தி.மு.க எம்.பியின் கோரிக்கையால் இந்தி வார்த்தை ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியில் பெயர்கள்
மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தி திணிப்பு முயற்சியை கடுமையாக மேற்கொண்டு வருகிறது. பாஜக அரசின் திட்டங்களின் பெயர்கள் தொடங்கி, இணையதளம், அலுவலக பயன்பாடு வரை இந்தியை முன்னிறுத்தி வருகின்றனர்.
அதுவும் சமீபகாலமாக இந்தி திணிப்பு முயற்சிகள் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. ஆனாலும், மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் கொஞ்சமும் சளைக்காமல் தொடர்ந்து மொழிப் பிரச்சனைகளைக் கிளப்பி வருகின்றனர்.

திமுக எதிர்ப்பு
அன்றைய காங்கிரஸ் அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளை எதிர்த்து பெரும் போராட்டங்களை நிகழ்த்திய இயக்கம் தி.மு.க. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களின் வழியாகவே இன்றும் தி.மு.கவின் ஆரம்பகாலம் நினைவுகூரப்படுகிறது. அந்தளவுக்கு இந்தி எதிர்ப்பும், தி.மு.கவும் பிண்ணிப் பிணைந்தது.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு தமிழகத்திலிருந்து அதிகமான எதிர்ப்புக் குரல் எழுந்து வருகிறது. குறிப்பாக, தி.மு.க எம்.பிக்கள் இந்தி திணிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

திவ்யங்ஜன்
இந்நிலையில், இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட், அறிவிப்பு குறித்த விபரங்கள் திவ்யங்ஜன் (Divyangjan) என்ற இணைப்பின் கீழ் உள்ளன. இந்த வார்த்தையை இந்தி பேசாத மாநில மக்கள் உச்சரிக்கக் கூட சிரமப்படுகின்றனர். அதன் அர்த்தம் யாருக்கும் தெரியாது. பிறகு எப்படி மாற்றுத்திறனாளிகள் இதை பயன்படுத்த முடியும்?
சமூக நீதி கொள்கையின் படி இந்தி வார்த்தையை 'Persons with Disabilities' என்று மாற்ற வேண்டும் எனக் கோரி நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

ரயில்வே ஏற்பு
தி.மு.க எம்.பி செந்தில் குமாரின் கோரிக்கையை ஏற்ற இந்திய ரயில்வே விரைவில் அதற்கான மாற்றத்தைச் செய்யவுள்ளதாக தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த தகவலை எம்.பி செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.
தி.மு.க எம்.பியின் கோரிக்கையால் இந்தியில் இருந்த வார்த்தை ஆங்கிலத்திற்கு மாற்றப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக செந்தில் குமார் எம்.பியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications