MLA-வை காணவில்லை.. கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம்.. பரபரப்பை ஏற்படுத்திய சுவர் விளம்பரம்..!
சென்னை: எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் நாங்குநேரி தொகுதியில் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாங்குநேரியை சேர்ந்த ஐயப்பன் என்பவரது பெயரில் இந்த சுவர் விளம்பரம் வரையப்பட்டுள்ளது.
தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நிறைவேற்றத் தவறிவிட்டார் என புகார் தெரிவிக்கப்படுகிறது.

நாங்குநேரி தொகுதி
நெல்லை மாவட்ட நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரூபி மனோகரன். சென்னையில் மிகப் பெரியளவில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் இவர் தமிழகத்தின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் சீட் கொடுக்கப்பட்ட போதே எதிர்ப்புகள் கிளம்பின.

குற்றச்சாட்டு
இருப்பினும் எதிர்ப்பாளர்களை அழைத்து பேசி சமாதானம் செய்து ரூபி மனோகரனுக்கு நாங்குநேரி தொகுதியை கொடுத்தது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை. தேர்தலின் போது உள்ளூர் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி இவைகளை எல்லாம் சரி செய்து கொடுப்பேன் என ரூபி மனோகரன் உறுதியளித்திருக்கிறார். ஆனால் வெற்றி பெற்று 5 மாதங்களாகியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் என குற்றஞ்சாட்டுகிறார் ஐயப்பன் என்பவர்.

சுவர் விளம்பரம்
மேலும், இவர் வரைந்துள்ள சுவர் விளம்பரத்தில் தில்லுக்கு விஜயன், சொல்லுக்கு அரிச்சந்திரன் , சொன்ன சொல்ல காப்பாற்ற தவறமாட்டார் ரூபி மனோகரன், இவரை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் நாங்குநேரியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சத்தியமூர்த்தி பவன் கவனத்துக்கும் வந்திருக்கிறது.

வாக்குறுதி
ரூபி மனோகரன் சென்னையிலேயே அதிகமாக தங்கிக்கொள்கிறார் என்பதும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதும் ஐயப்பன் தரப்பு குற்றச்சாட்டாகும். மேலும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை கூட இன்னும் முறைப்படி திறக்கவில்லை என்பதும் இவரது புகாராக உள்ளது. இதனிடையே இந்த புகாரை மறுக்கும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தரப்பு, தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை படிபடியாக நிறைவேற்றி வருவதாக தெரிவிக்கிறது.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications