மழைக்காலத்தில் கரண்ட் மட்டுமல்ல..தக்காளியும் ‘ஷாக்’ அடிக்கும் போலயே! இவ்வளவு விலை அதிகமா? கஷ்டம்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனையான தக்காளி விலை, தற்போது ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்களில், காய்கறிகள் வருகின்றன. தினமும் 80 வாகனங்கள் மூலம் 1200 டன் தக்காளி கொண்டு வரப்படுகின்றன.

சந்தையில் ஏறத்தாழ 1,985 மொத்த விற்பனையாளர்கள் காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்பேடு சந்தையில் 3,941 கடைகள் உள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

தொடர் மழை - வரத்து குறைவு

தொடர் மழை - வரத்து குறைவு

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல், திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படும். தற்போது பெய்து வரும் மழையால், தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 90 வாகனங்களில் தக்காளி இறக்குமதி செய்யப்படும். தற்போது தொடர் மழை காரணமாக 40 இருந்து 45 வாகனங்களில் மட்டுமே தக்காளி வரத்து உள்ளது.

கிடுகிடுவென விலை உயர்வு

கிடுகிடுவென விலை உயர்வு

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து வருவதால், விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த வாரங்களில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து ரூ.40-க்கு விற்பனையானது. இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற கடைகளில் தக்காளியின் விலை ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை மேலும் உயரும்

விலை மேலும் உயரும்

அண்டை மாநிலங்களில் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து வருவதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கோயம்பேடு வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அண்டை மாநிலங்களில் மழை மேலும் நீடித்தால், உற்பத்தி குறைந்து அனைத்து காய்கறிகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இல்லத்தரசிகள் அதிர்ச்சி

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.30-க்குள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நாளில் தக்காளியின் விலை உயர்ந்த நிலையில், மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரிக்க கூடுமோ என இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+