ரெடியான பிளான்.. சசிகலாவுக்கு செக்?.. எடப்பாடியின் அடுத்த அதிரடி.. அதிமுகவே படுபிஸி.. காரணம் இதுதான்
அதிமுகவில் 3ம் கட்ட உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: அதிமுகவில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி பரபரப்பாக காணப்படுகிறது.
சட்டசபை தேர்தல், 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி என மொத்த தேர்தலிலும் மண்ணை கவ்விக் கொண்டுவிட்டது அதிமுக.
மற்றொரு புறம் சசிகலாவின் எழுச்சியும் வேகம் எடுத்து வருவதால், மிகப்பெரிய நெருக்கடிக்கு அதிமுக ஆளாகி வருகிறது.. அதனால், சசிகலாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்தவும், அதிமுகவின் பலத்தை நிரூபிக்கவும், உட்கட்சி தேர்தல் என்ற அஸ்திரத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பே கையில் எடுத்தது அதிமுக..

நிர்வாகிகள்
அரசியல் கட்சிகள் 5 வருடங்களுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி... அந்த வகையில், உட்கட்சி தேர்தலை இந்த மாதத்திற்குள் முடித்து, அடுத்த மாதம் பொதுக்குழுவை கூட்டிவிடலாம் என்பதே அதிமுக மேலிட தலைவர்களின் திட்டமாக இருந்தது.. ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராகவும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

அஸ்திரம்
தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும், கிளை செயலர் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி, ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் மட்டும் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது.. இதைதான் சசிகலாவுக்கு எதிரான அஸ்திரமாகவும் பயன்படுத்தி கொள்ளவும் அதிமுக யோசிக்கிறது.. அந்த வகையில், அதிமுகவில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் அறிவிப்பு
உட்கட்சி தேர்தல் நடந்து வரும் நிலையில், ஏற்கனவே 2 கட்ட தேர்தல் முடிந்தவிட்டது.. இப்போது 3-ம் கட்டமாக, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது... ஒன்றியம், நகரம், பேரூராட்சி செயலர் பதவிக்கு, 5,000; மற்ற பதவிகளுக்கு, 2,000 ரூபாய் கட்டணம். பகுதி செயலர் பதவிக்கு, 5,000 ரூபாய், பகுதியில் மற்ற பதவிகளுக்கு, 2,500 ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வரும், 27ம் தேதி, 25 மாவட்டங்களில், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகள் தேர்தல் நடக்க உள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இந்த மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. இதையடுத்து அதிமுக கூடாரம் மும்முரமாக காணப்படுகிறது.. தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்து, சசிகலாவின் திட்டங்களை முறியடிக்க எடப்பாடி டீம் தயாராக காத்து கொண்டிருப்பதாக தெரிகிறது.. ஆனால், ஓபிஎஸ் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது தெரியாமல், மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பு குழம்பி போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications