எதுக்கு இவங்களுக்கு வீண் முயற்சி.. அரசியலை விட்டு விலகுவதே சரி.. சசிகலாவுக்கு மாஜி அமைச்சர் அட்வைஸ்
சென்னை: அரசியலைவிட்டு சசிகலா விலகுவதுதான் சரி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவை கைப்பற்றும் கடும் முயற்சியில் சசிகலா அண்மைகாலமாக ஈடுபட்டு வந்தார். தனது காரில் அதிமுக கொடியுடன் வலம் வருகிறார். லெட்டர்பேடிலும் அதிமுக பொதுச் செயலாளர் என்றே குறிப்பிடுகிறார்.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா பொதுக் குழு கூட்டப்பட்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் பதவியும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது.

சசிகலா மனுதாக்கல்
இதை எதிர்த்து சசிகலா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அதிமுகவிற்கு சசிகலா சொந்தம் கொண்டாடுவது ஏற்புடையதல்ல என கூறி சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

சசிகலாவுக்கு எதிரான வழக்கு
இந்த நேற்றைய தினம் சசிகலாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வெளியானது. அப்போது சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி, அதிமுகவுக்கு உரிமை கோரிய சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பை அதிமுகவினர் வரவேற்று கொண்டாடினர்.

சசிகலா கூறியது என்ன?
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சசிகலா கூறுகையில் உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்றார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் சசிகலா அரசியலை விட்டு விலகுவதே சரி.

சசிகலாவுக்கு என்ன சம்பந்தம்?
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதிமுகவினர் ஒற்றுமையாக உள்ளனர். அதிமுகவை கைப்பற்றும் முயற்சி சசிகலாவுக்கு தொடர்ந்து தோல்வியை கொடுத்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications