தர்மயுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ்.. சசிகலாவை பிடிக்கும் என்று சொன்னது ஏன்? ஜெயக்குமார் கிடுக்கிப்பிடி
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டு பிடிக்க தர்மயுத்தம் நடத்தியவரே சசிகலாவை தனிப்பட்ட முறையில் பிடிக்கும் என்று சொன்னது ஏன் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கியவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டவர் டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்தது ஏன்?ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவிற்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்து விட்டு வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். தனிப்பட்ட முறையில் சசிகலாவை தனக்கு பிடிக்கும் என்று சொன்னதும் அவர்தான் என்றும் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
சட்டதிட்டங்களின் படி அதிமுக பொதுக்குழு முறையாக நடைபெற்றதாக கூறினார். பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் மருது அழகுராஜ் செயல்பட்டு வருகிறார்.
நமது அம்மா நாளிதழில் முறைகேடு செய்ததால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் மருது அழகுராஜ். ஓ.பன்னீர் செல்வம் பக்கம் சாய்ந்து கொண்டு கூலிக்கு மாறடித்து வருகிறார். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது போல பேசி வருகிறார் மருது அழகுராஜ்.

நீதிமன்றம் நல்ல தீர்ப்பு
ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்ல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்களும் கொதித்தெழும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக சட்டதிட்ட விதிமுறைகளின்படிதான் அனைத்தும் நடைபெறுகிறது. எங்கள் பக்கம் நியாயம் உள்ளதால் நிச்சயம் நல்ல தீர்ப்பை நீதிமன்றம் அளிக்கும் என்று நம்புகிறோம்.

கோடநாடு கொலை குற்றவாளிகள்
கோடாநாடு கொலை பற்றி சந்தேகம் எழுப்புகிறார் மருது அழகுராஜ். கோடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போர்கால அடிப்படையில் கண்டுபிடித்து கைது செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
அந்த குற்றவாளிகள் மீது நிறைய குற்றங்கள் உள்ளன. அந்த குற்றவாளிகளை ஜாமீனில் எடுத்தது திமுக வழக்கறிஞர்தான். குற்றவாளிகளுக்கு வக்கீல் டீமை அனுப்பியது திமுதான் இதை ஏன் மருது அழகுராஜ் கூறவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

தர்மயுத்தம் நடத்தியவர்
யார் தவறு செய்தாலும் தண்டனை நிச்சயம் என்று எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் மனச்சாட்சிப்படி நடக்கவில்லை. சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கியவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டவர் டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்தது ஏன்?ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவிற்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்து விட்டு வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். தனிப்பட்ட முறையில் சசிகலாவை தனக்கு பிடிக்கும் என்று சொன்னதும் அவர்தான்.

ஓ.பன்னீர் செல்வம்
எனக்கு வந்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்று சொன்னதும் ஓ.பன்னீர் செல்வம்தான். அதை ஏன் மருது அழகுராஜ் சொல்லவில்லை. ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதாக கூறினாரே. அதைக் கேட்டு அதிமுகவினர் கொதித்து போயிருக்கின்றனர்.

திமுக தீய சக்தி
அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்ததே குடும்ப ஆதிக்கத்தில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்றுதான். கருணாநிதி என்பவர் ஒரு தீய சக்தி என்று எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் விமர்சித்துள்ளனர். வாழ்நாள் முழுவதும் திமுக எதிர்ப்பு கொள்கையை கொண்டவர்கள். எந்த நிலையிலும் திமுக என்ற தீய சக்தியை தலைதூக்க விடக்கூடாது என்று சொன்னவர். அதை மீறி முதல்வரை சந்தித்து பேசியிருக்கிறார் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் ஜெயக்குமார்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications