கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம்.. 3 தங்கம் வென்று அசத்திய சென்னை காசிமேடு கீர்த்தனா
மாலே: மாலத்தீவில் நடந்த 7வது கேரம் உலக கோப்பை சாம்பியன் தொடரில் மகளிர் ஒற்றையர், இரட்டையர், அணி என மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா.. அதேநேரம் மகளிர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டின் காசிமா, மித்ரா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. கடந்த உலக கோப்பையில் தங்கம் வென்ற காசிமா, தற்போது வெண்கலம் வென்றுள்ளார்.
7வது உலக கோப்பை கேரம் போட்டி மாலத்தீவு நாட்டில் உள்ள மாலே நகரில் நடந்து வந்தது. இந்த முறை இந்திய கேரம் அணியில் கீர்த்தனா, கடந்த முறை சாம்பியனான சென்னையைச் சேர்ந்த காசிமா மற்றும் மித்ரா ஆகிய மூன்று வீராங்கனைகள் இடம் பெற்று இருந்தனர். இந்த தொடரின் இறுதி போட்டிகள் நேற்று நடந்தது. இதில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்தியா அசத்தியுள்ளது. தமிழக வீரர் வீராங்கனையும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த ஆண்டுககான கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா. மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர், என்று இரண்டில் தங்கம் வென்று அசத்தயுள்ளார் கீர்த்தனா. அதேபோல் கீர்த்தனா இடம் பெற்ற அணி தங்கம் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் கீர்த்தனா..
கடந்த முறை தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை தனிநபர், ஜோடி ஆகிய வேறு வேறு ஆட்டங்களில் தங்கம் வென்றிருந்த சென்னையைச் சேர்ந்த காசிமா, தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார். அதேபோன்று குழு போட்டியில் தங்கம் வெல்ல காசிமாவும் காரணமாக இருந்துள்ளார்.
அதேபோல் தமிழக வீராங்கனை மித்ரா, கீர்த்தனா உடன் தனிநபர் போட்டியில் தோற்றாலும் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக ஏழு பிரிவுகளின் கீழ் நடந்த இந்த உலக கோப்பை போட்டியில், ஆண்கள், பெண்கள் சேர்ந்து ஏழு தங்கம், நான்கு வெள்ளி, 3 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. வெற்றி பெற்ற வீராங்கனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications