Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'கொங்குநாடு சர்ச்சை' .. அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, கடம்பூர் ராஜுவின் பளிச் பதில் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கொங்கு மண்டல சர்ச்சை குறித்து ஊடகங்களின் யூகத்திற்கு பதிலளிக்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார். இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கொங்குநாடு அமைப்பது தொடர்பாக நாங்கள் எந்தவித கருத்தும் கூறவில்லை. அதை தெரிவித்திருந்தவர்கள் தான் கருத்து கூற வேண்டும் என்று கூறினார்.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதுபற்றி மத்திய அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாநில அரசும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதேநேரம் கொங்குநாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பான பரிசீலனை மத்திய அரசிடம் தொடக்க நிலையில் உள்ளது என்று கூறினார். அந்த பகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்றும் கூறினார்.

கடும் விவாதம்

கடும் விவாதம்


இந்நிலையில் கொங்குநாடு விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் விவாதங்கள் நடந்து வருகிறது இந்நிலையில் கொங்கு மண்டல சர்ச்சை குறித்து ஊடகம் மற்றும் பத்திரிகை துறையின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார்.

பதிலளிக்க முடியாது

பதிலளிக்க முடியாது


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அலுவலகத்தை திறந்து வைக்க வந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தற்போது தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வரும் கொங்கு மண்டல சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதிலளித்த பேசிய அமைச்சர் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்களின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என கூறிவிட்டு வேகமாக கிளம்பி சென்றார்

மரியாதை

மரியாதை

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் மணி மண்டபத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் 311 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆட்சிபொறுப்பில் இல்லை

ஆட்சிபொறுப்பில் இல்லை

பின்னர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும் போது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. கொங்குநாடு அமைப்பது தொடர்பாக நாங்கள் எந்தவித கருத்தும் கூறவில்லை. எனவே அதை தெரிவித்திருந்தவர்கள் தான் கருத்து கூற வேண்டும் என்றார்.

ஆயிரம் ரூபாய் உதவி

ஆயிரம் ரூபாய் உதவி

சட்டசபை கூட்டத்தொடர் தொடர்பாக பேசிய கடம்பூர் ராஜூ தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 4 நாட்கள் நடந்தன. இதில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஆணித்தரமான கருத்தை நாங்கள் பதிவு செய்துள்ளோம். கிடைத்த இரண்டு நாட்களில் திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவை ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்தோம். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் முயலை விட வேகமாக அதிமுக செயல்படும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+