Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார் ஓட்டிய போது கைகளை தட்டிய யாஷிகா?.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்!.. திக் திக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காரை ஓட்டிய போது ஸ்டியரிங்கை விட்டு விட்டு கைகளை தட்டி என்ஜாய் செய்தாரா யாஷிகா என்ற சந்தேகம் இறந்த அவரது தோழி விபத்துக்கு முன்னர் பதிவு செய்த வீடியோவை பார்க்கும் போது எழுகிறது.

Recommended Video

    கார் ஓட்டிய போது கைகளை தட்டிய யாஷிகா?.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்!.. திக் திக்!

    கடந்த 25 ஆம் தேதி யாஷிகா ஆனந்த் தனது 3 நண்பர்களுடன் கிழக்குக் கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே ஒரு ரிசார்ட்டில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பி கொண்டிருந்தார்.

    அந்த காரை யாஷிகாவே ஓட்டினார். அவரது பக்கத்து சீட்டில் தோழி வள்ளிச் செட்டி பவானி இருந்தார். பின்பக்கத்தில் இரு ஆண் நண்பர்கள் உட்கார்ந்திருந்தனர்.

    மருத்துவமனை

    மருத்துவமனை

    அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது சூலேரிக்காடு என்ற இடத்தில் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் இடித்தார். அப்போது இந்த விபத்தில் வள்ளி செட்டி பவானி உயிரிழந்துவிட்டார். மற்ற மூவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

    மேற்கூரை

    மேற்கூரை

    இந்த நிலையில் யாஷிகாவின் காரின் மேற்கூரையை திறக்க முடியும். இதனால் யாஷிகாவின் நண்பர்கள் எழுந்து நின்று கொண்டு பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். இறந்து போன வள்ளிச் செட்டி பவானி ஹைதராபாத்தை சேர்ந்தவர்.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்து வந்தார். யாஷிகாவை பார்ப்பதற்காக கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் சென்னை வந்திருந்தார். விபத்து ஏற்படுவதற்கு முன்னர் யாஷிகாவின் தோழி வள்ளிச் செட்டி பவானி எடுத்திருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    கார் ஓட்டுதல்

    கார் ஓட்டுதல்

    அதில் மின்னல் வேகத்தில் காரை ஓட்டுகிறார் யாஷிகா ஆனந்த். பயங்கர சப்தத்தில் பாட்டு ஒலிக்கிறது. இதில் அவ்வப்போது ஸ்டியரிங்கில் இருந்து யாஷிகா கைகளை எடுத்துவிட்டு கிளாப் செய்வது போன்று இருக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது விபத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோதானா என தெரியவில்லை.

    போலீஸிடம் வாக்குமூலம்

    போலீஸிடம் வாக்குமூலம்

    மேலும் யாஷிகா போலீஸிடம் கூறிய வாக்குமூலத்தில் தனது தோழி சீட் பெல்ட் அணியவில்லை என தெரிவித்திருந்தார். எனவே இதை வைத்து பார்க்கும் போது விபத்து நடப்பதற்கு முன்னர் யாஷிகாவின் தோழி மட்டும் மேல் டாப்பில் எழுந்து நின்று ஆரவாரம் செய்திருக்கக் கூடும்.

    யாஷிகா அதிவேகம்

    யாஷிகா அதிவேகம்

    யாஷிகா அதிவேகமாக சென்றதாலும் கைகளை தட்டியதாலும் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரில் மோதியது. சீட் பெல்ட் போட்டிருந்த யாஷிகா தனது காரில் இருந்த ஏர் பலூன் திறந்ததால் உயிர் தப்பினார். ஆனால் சீட் பெல்ட் அணியாத அவரது தோழி காரின் மேற்கூரையிலிருந்து தூக்கி வீசப்பட்டதால் இறந்திருக்கலாம் என தெரிகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+