துப்பாக்கி கலாச்சாரம், கட்டப்பஞ்சாயத்து, சட்டம் ஒழுங்கு சரியில்லை - எடப்பாடி சரமாரி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்த எட்டு மாத காலத்தில் கொலை கொள்ளை திருட்டு பாலியல் பலாத்காரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெண்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.

Recommended Video

    திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு | Oneindia Tamil

    தமிழக சட்டசபையில் இருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    வெளிநடப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கஞ்சா,குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

    சட்டம் ஒழுங்கு சரியில்லை

    சட்டம் ஒழுங்கு சரியில்லை

    தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் கட்டப்பஞ்சாயத்து கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. இந்த எட்டு மாத காலத்தில் கொலை கொள்ளை திருட்டு பாலியல் பலாத்காரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெண்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் உள்ளது. விசாரணை என்ற பெயரில் காவல்துறையால் அதிமுக நிர்வாகிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். அதிமுக அரசால் பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது.

    நிவாரணம் வழங்கவில்லை

    நிவாரணம் வழங்கவில்லை

    வடகிழக்கு பருவமழையில் பல வீதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உணவு கிடைக்காமல் மக்களும் பால் கிடைக்காமல் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகளை திமுக அரசு செய்யவில்லை. 2015 இல் பெரிதல்ல பாதிப்பு ஏற்பட்டபோது அதிமுக அரசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது ஆனால் திமுக அரசு எந்தவிதமான நிவாரணத் தொகையும் வழங்கவில்லை. வெள்ள நீரால் நெற்பயிர்கள் மூழ்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை.

    காழ்ப்புணர்ச்சி

    காழ்ப்புணர்ச்சி

    தமிழக மக்கள் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட ரூ..2500 கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது ஆனால் திமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக பணம் ஏதும் வழங்கப்படவில்லை இது தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஏழை எளிய மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே பயன்பெறும் வகையில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு அது அம்மா பெயரில் செயல்படுவதால் காழ் புணர்ச்சி கொண்டு அதனை மூடி உள்ளது.

    அரசின் கைப்பாவை

    அரசின் கைப்பாவை

    திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நம்பி 48 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றனர். ஆனால் தற்போது 13 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர்கள் என கூறி ஏமாற்றி உள்ளது இந்த அரசு. தமிழக காவல்துறை தமிழக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கண்டித்து தான் இன்றைய தினம் திமுக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+