எல்டிடிஇக்கு ஆள்சேர்ப்பு? வைகோ மாஜி உதவியாளரிடம் கியூ பிரிவு போலீஸ் விசாரணை.. செல்போன் பறிமுதல்
சென்னை: விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆள் சேர்க்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் இருந்து லேப்டாப் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரிடம் கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழீழம் என்ற நாட்டை உருவாக்கும் நோக்கத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு சுருக்கமாக எல்டிடிஇ என்று அழைக்கப்பட்டு வருகிறது. தலைவராக பிரபாகரன் செயல்பட்டு வருகிறார்.

இலங்கை அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக இலங்கையில் போர் நடவடிக்கையில் ஈடுபட்டார். இந்தியாவில் இந்த அமைப்புக்கு தடை உள்ளது. இதற்கிடையே தான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆள்சேர்க்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்தை பிடித்து சென்னை க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கேகே நகரில் தற்போது பிரசாத் வசித்து வருகிறார். அங்குள்ள அவரது வீட்டில் கியூ பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு பிரசாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கியூ பிரிவு போலீசாரின் பார்வை பிரசாத் பக்கம் திரும்ப ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது கடந்த டிசம்பர் மாதம் மாங்காட்டில் சட்டவிரோதமாக தங்கியதாக இலங்கையை சேர்ந்த 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களின் பெயர்கள் நவநாதன், இலக்கியன். இவர்களுக்கு எல்டிடிஇ அமைப்புடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் 2 பேருக்கும் மாங்காட்டில் தங்க வைத்தது யார்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தான் பிரசாத்தின் பக்கம் கியூ பிரிவு போலீசாரின் பார்வை என்பது திரும்பியுள்ளது. எல்டிடிஇ அமைப்பு இலங்கையில் தமிழீழம் கேட்டு போராடியபோது தமிழகத்தின் பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதில் வைகோவும் முக்கியமான ஒருவர். இப்படியான நிலையில் தான் பிரசாத்திடம் சென்னை கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications