Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடங்கிய ஆசை.. முடிந்த மோகம்! மாமா குட்டியால் முடிந்த காதலியின் வாழ்க்கை! கொலைகாரனான 2கே கிட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள் என்பார்கள் அப்படித்தான் ஒரு சம்பவம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரங்கேறி இருக்கிறது. காதலித்து திருமணம் செய்த மனைவியை நான்கே மாதங்களில் கொடூரமாக கொலை செய்திருக்கிறான் கணவன். இன்னொருவரிடம் மனைவி செல்போனில் பேசியதால் ஆத்திரத்தில் இந்த கொலை அரங்கேறி இருப்பதாக கூறுகின்றனர்.

தமிழகத்தில் இளம் வயது சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார் போல் விவாகரத்து சம்பவங்களும் தொடர்கிறது. வயது ஈர்ப்பில் காதலித்து திருமணம் செய்துவிட்டு சில மாதங்களிலேயே அந்த உறவு கசந்தும் விடுகிறது.

ஆனால் கொலைவரை செல்லும் என யாதும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் சரணின் குடும்பத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தான் 20 வயதான சரண். இரண்டு வருடங்களாக அப்பகுரியைச் சேர்ந்த மதுமிதா என்பவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

chengalpattu crime police

காதல் திருமணம்

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது. காதல் வானில் சிறகடித்து பறந்தவர்கள் கணவன் மனைவியான பின் தான் பிரச்சனையே ஆரம்பித்து இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு தனது ஆண் நண்பருடன் மதுமிதா தொடர்ந்து செல்போனில் பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரண் மதுமிதாவிடம் ஆண் நண்பரிடம் பேசக்கூடாது எனச் சொல்லி இருக்கிறார். ஆனாலும் மதுமிதா ஆண் நண்பருடன் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது.

மனைவி கொலை

இந்த நிலையில் நேற்று மனைவியிடம் நைசாக பேசிய சரண் ஒரத்தி அருகே இருக்கும் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தன்னை கொலை செய்யத்தான் கணவன் அழைத்துச் செல்கிறான் என்பது மதுமிதாவுக்கு தெரியாது. யாரும் இல்லாத மலைப் பகுதிக்குச் சென்றபோது ஆண் நண்பருடன் பேசக் கூடாது என சரண் மதுமிதாவிடம் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த சரண் தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மதுமிதாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.

கணவன் கைது

தொடர்ந்து அங்கிருந்து சென்று சிலாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று தாயாரிடம் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மதுமிதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை வழக்கு

சரண் அப்பகுதியில் புள்ளிங்கோவாய் வளம் வந்ததும், அவர் மீது கஞ்சா உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. காதல் மனைவியை கொலை செய்துவிட்டு தற்போது கம்பி எண்ணி வருகிறார் 2கே கிட் சரண்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+