மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மக்களுக்கு எழுப்பிய அதிரடி கேள்வி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களே நீங்கள் நாடு பிடிக்க நடிப்பவர்கள் பக்கமா, அல்லது நாடு காக்க துணிகிறவர்கள் பக்கமா என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக பாஜக ஒரு அணியாகவும், திமுக காங்கிரஸ் ஒரு அணியாகவும், சீமான், கமல்ஹாசன் ஆகியோர் தனித்தனியாகவும் என நான்கு அணிகள் தேர்தலில் பிரதானமாக போட்டியிடுகின்றன.

 makkal needhi maiam party leader Kamal Haasan questioned to people

இந்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் எடப்பாடியார் மற்றும் முக ஸ்டாலின் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே சீமானும், கமல்ஹாசனும் இருகட்சிகளையும் விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவர் இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில். "எதை செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள். எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமென துடிப்பவர்கள் நாடு காக்க துணிகிறார்கள். முன்னது வெறி, பின்னது வீரம்: நீங்கள் யார் பக்கம்?" என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+