உதகையில் உதிக்கும் உதயசூரியன்.. அதிமுக முக்கிய அமைச்சருக்கு கடும் போட்டி மாலை முரசு கருத்துக்கணிப்பு
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுவதாக மாலை முரசு தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. அதிமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான செங்கோட்டையன் போட்டியிடும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இழுபறி நிலவுகிறது
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
இந்தத் தேர்தல் தொடர்பாக மாலை முரசு செய்தி தொலைக்காட்சி 26 தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

அவிநாசியில் இழுபறி
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் இழுபறி நிலவுவதாக மாலை முரசு தெரிவித்துள்ளது. அவிநாசி தொகுதியில் அதிமுக மற்றும் திமுக 42% வாக்குகளை பெறும். மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் தலா 4 %, அமமுக 3% வாக்குகளை பெறும். மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிமுக 41% வாக்குகளைப் பெற்று வெல்லும். திமுக 39% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக முன்னிலை
நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் அதிமுக 46% வாக்குகளை பெற்று வெல்லும். திமுக 42% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். நாம் தமிழர் 4% மக்கள் நீதி மய்யம் 3% அமமுக 2% வாக்குகளை பெறும். கூடலூர் தொகுதியில் இழுபறி நிலவுகிறது. கூடலூர் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக 43% வாக்குகளை பெறும் அமமுக 5% நாம் தமிழர் 4 %, மக்கள் நீதி மய்யம் 1% வாக்குகளை பெறும். இங்கு பெரும்பாலான மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவில்லை என்றே தெரிவித்துள்ளதாக மாலை முரசு குறிப்பிட்டுள்ளது.

உதகை யாருக்கு
உதகை தொகுதியில் காங்கிஸ் (திமுக கூட்டணி) 46% வாக்குகளை பெறும். பாஜக (அதிமுக கூட்டணி) 39% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். அமமுக 6% நாம் தமிழர் 4% மக்கள் நீதி மய்யம் 3% வாக்குகளை பெறும். ஈரோடு பவானிசாகர் தொகுதியில் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் (திமுக கூட்டணி) 47% வாக்குகளை பெறுவார். அதிமுக 41% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

செங்கோட்டையனுக்கு கடும் போட்டி
அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிடும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இழுபறி நிலவுகிறது. இங்கு தொகுதியில் அதிமுக மற்றும் திமுக 42% வாக்குகளை பெறும். நாம் தமிழர் 5%, மக்கள் நீதி மய்யம் 3%, அமமுக 2% வாக்குகளை பெறும். அந்தியூர் தொகுதியில் திமுக 44% வாக்குகளை பெறும். அதிமுக 42% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும் என்று மாலை முரசு சர்வே தெரிவித்துள்ளது.

வெற்றி வாகை சூடும் கேசி கருப்பணன்
அதேபோல அமைச்சர் கேசி கருப்பணன் போட்டியிடும் பவானி தொகுதியில் அதிமுக 45% வாக்குகளை பெற்று வெல்லும். திமுக 42% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். நாம் தமிழர் 5%, மக்கள் நீதி மய்யம் 3%, அமமுக 2% வாக்குகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு!












Click it and Unblock the Notifications