மாண்டஸ் புயல் எதிரொலி.. தமிழகத்தில் இன்று இரவு ஆம்னி பஸ்கள் இயங்குமா? என்ன சொல்கிறார் சங்க தலைவர்?
சென்னை: மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் நிலையில் சென்னையில் மாநகர அரசு பஸ்கள் இன்று இரவு இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரவு ஆம்னி பஸ்கள் இயக்கப்படுமா என்பது பற்றி அனைத்து ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.
வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் தீவிர புயலாக உருமாறிய நிலையில் இன்று மதியம் அது வலுவிழந்தது. தற்போது புயலாக இது உள்ளது.
இந்த புயல் இன்று காலை 5.30 மணியளவில் காரைக்காலில் இருந்து கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவும், சென்னையில் இருந்து சுமார் 270 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கு மையம் கொண்டுள்ளது.

நள்ளிரவில் கரையை கடக்கும் புயல்
இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுகுறைந்து இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை தமிழ்நாட்டின் மாமல்லபுரம் அருகே புயலாக கரையை கடக்க உள்ளது. புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் கடலோர மாவட்டங்கள், கடலோர வழித்தடங்களில் இன்று இரவு பஸ்கள் இயக்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆம்னி பஸ்கள் இயங்குமா?
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்கள் இயங்குமா? இயங்காதா? என்ற கேள்விகள் எழுந்தன. இதற்கு அனைத்து ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛தமிழகத்தில் வழக்கம்போல் ஆம்னி பஸ்கள் இயங்கும். வார இறுதி நாள் என்பதாலும், ஏற்கனவே பயணிகள் பயணத்தை திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

சென்னையில் பஸ்கள் இயங்குமா?
இருப்பினும் சென்னையில் இன்று இரவு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பஸ்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு நேரத்தில் 603 வழித்தடங்களில் மொத்தம் 555 மாநகர அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மாண்டஸ் புயல் கரையை கடப்பதால் இன்று இரவு சென்னையில் மாநகர அரசு பஸ்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்
மேலும் தமிழ்நாட்டில் வழக்கம்போல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கும் என தற்போது புதிய அ்றிவிப்பு செய்யப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வேளையில் மட்டும் 3 மணிநேரத்துக்கு முன்பு சென்னை, புதுச்சேரி உள்பட பல்வேறு கடற்கரையோர சாலைகளில் இயங்க வேண்டிய பஸ்கள் நிறுத்தப்படும் எனவும் மாற்று வழிப்பாதையில் இயக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications