லண்டனை போல் சென்னை மாறும்! கூவம் நதி தூய்மையாக்கப்படும்! அமைச்சர் எ.வ.வேலு கொடுத்த உறுதி!
சென்னை: கூவம் நதியை சீரமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அதன் பிறகு லண்டனை போல் சென்னை மாறும் எனவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மழைக்காலத்திற்கு பிறகு கூவம் நதியை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்ற உறுதியை அமைச்சர் எ.வ.வேலு அளித்துள்ளார்.
இதனிடையே இந்தாண்டு சென்னையில் மழைவெள்ளம் ஏற்படாது என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 90% நிறைவடைந்து விட்டதாகவும் இன்னும் 10% மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார். அதனையும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பணிகள் விரைந்து முடிவடையும் எனக் கூறினார்.
சென்னை மக்கள் இந்தாண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அதிகாரிகள் போட்டி போட்டு பணியாற்றி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

இதேபோல் மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் சாலையை வரும் 2024ஆம் ஆண்டு திறக்கும் வகையில் பணிகள் நடைபெற உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார்.
இதனிடையே தேம்ஸ் நதியை போல் கூவம் நதி தூய்மையாக்கப்பட்டால் அது தமிழக வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படும். அமைச்சர் எ.வ.வேலு கூறியதை போல் சென்னை லண்டனாக எப்போது மாறும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் சென்னை வாசிகள்.












Click it and Unblock the Notifications