தங்க மாட்டில் பால் கறந்து குடிக்கிறார் அமைச்சர் நாசர்.. அதான் இது தெரியல போல - அண்ணாமலை சாடல்!
சென்னை : அமைச்சர் நாசர் தங்க மாட்டில் பால் கறந்து குடித்துக்கொண்டு இருப்பதால்தான் என்னைப் போன்ற சாமானியர்கள் ஆவின் பால் வாங்குவார்களா இல்லையா என்று கூட அவருக்குத் தெரியவில்லை என விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
Recommended Video
கடந்த சில நாட்களாக ஆவின் பால் தொடர்பான சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசரின் தொகுதியான ஆவடியில் இன்று நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
அப்போது பேசிய அண்ணாமலை, தன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் பதவியில் நீடிப்பது குறித்து அமைச்சர் நாசர் தான் முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நாசர்
ஆவின் பால் பாக்கெட்களில் அளவு குறைந்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், பொய் கூறுவதையே தொழிலாக வைத்துள்ளதாக அண்ணாமலையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் விமர்சித்தார். இது இரு தரப்பினர் இடையே கருத்து மோதலை உருவாக்கியிருந்த நிலையில் இன்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பேரணி நடைபெற்றது.

திமுகவிற்கு கோரிக்கை
இந்தப் பேரணியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். ஆவடி சிக்னல் அருகே அமைந்துள்ள காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறுகையில், "வரப்போகும் 75வது சுதந்திர தினத்தை முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு வழிவகை செய்யுமாறு தமிழக அரசுக்கும் திமுகவினருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன்.

அமைச்சர் பதவியில் இருந்து
மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் வெளியாவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆவின் சங்கங்களை சேர்ந்தவர்களே அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆவடி தொகுதியில் அமைச்சராக வலம் வரும் நாசர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் அமைச்சர் பதவியில் அவர் இருப்பது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

தங்க மாட்டில் பால்
பால்வளத்துறை அமைச்சர் நாசர் தங்க மாட்டில் பால் கறந்து குடித்துக்கொண்டு தங்கத்தட்டில் உணவருந்திக் கொண்டிருப்பதால்தான் என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் ஆவின் பால் வாங்குவார்களா இல்லையா என்று கூட அவருக்குத் தெரிவதில்லை. நாசர் சம்பாதித்த பணத்தில் கொழித்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் சாமானிய மக்களாக உள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications