ஆடு, மாட்டை போல் அடிச்சாங்க.. இப்போ காங்கிரஸில் இருந்து நீக்கிட்டாங்க.. ரூபி மனோகரன் கொந்தளிப்பு
சென்னை: ‛‛களக்காட்டில் இருந்து சென்னைக்கு சென்ற என்னுடைய பிள்ளைகளை ஆடு, மாட்டை அடிப்பது போல் அடித்துவிட்டு ஒன்றும் செய்யாத என்னிடம் விளக்கம் கேட்டு இடைநீக்கம் செய்துள்ளனர். இது ரொம்ப வருத்தமாக இருக்கிறது'' என நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் கொந்தளித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இந்த மோதலில் 3 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் தமிழக காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூபி மனோகரன் இடைநீக்கம்
இந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளருமான, திருநெல்வேலி மாவட்டம் நாங்கநேரி தொகுதியி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன், எஸ்சி பிரிவு தலைவர் எம்பி ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்க நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க கூறப்பட்டு இருந்தது. ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இன்று ரூபி மனோகரன் ஆஜராகவில்லை. அவர் விலக்கு கோரி கடிதம் அனுப்பி இருந்தார். இதனை ஒழுங்கு நடவடிக்கை குழு ஏற்கவில்லை. இதையடுத்து அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து அறிவிக்கப்பட்டது.

ரூபி மனோகரன் பேட்டி
இந்நிலையில் தான் திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் ரூபி மனோகரன் எம்எல்ஏ இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக கட்சி சார்பில் இன்று விளக்கம் அளிக்க கோரியிருந்தனர் களக்காட்டில் நிறைய நிகழ்ச்சியில் வைத்துள்ளேன். இதனால் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் கேஆர் ராமசாமியிடம் இன்னும் கொஞ்சம் நாள் தாங்க என கேட்டிருந்தேன். சுப்ரீம் கோர்ட்டில் கூட விசாரணைக்கு ஆஜராக நேரம் கேட்பார்கள். அதேபோன்று தான் நானும் நேரம் கேட்டேன். இப்போது என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். இதனை நீங்களும் சொன்னீர்கள். வாட்ஸ்அப்பிலும் பார்த்தேன். இது எனது மனதுக்கு மிகவும் கஷ்டமானதாக உள்ளது.

மிகப்பெரிய வருத்தம்
கட்சிக்காக 20 ஆண்டுகளாக நான் எனது தொழிலை கூட விட்டுவிட்டேன். காங்கிரஸ் தலைவராக இருந்த தங்கபாலு, இவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசு உடன் வேலை செய்துள்ளேன். இப்போது உள்ள தலைவருடனும் 2 ஆண்டு காலம் கடுமையாக உழைத்து வருகிறேன். இந்த நிலையில் தான் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கான செய்தி வந்துள்ளது. இதை என்னால் தாங்க முடியவில்லை. நான் கட்சியை பற்றியும், தலைவர்கள் பற்றியும் எந்த குறையும் கூறவில்லை. ஆனால் எனக்கு மிகப்பெரிய வருத்தம் உள்ளது.

ஆடு-மாட்டை அடிப்பது போல்..
களக்காட்டில் இருந்து சென்னைக்கு சென்ற என்னுடைய பிள்ளைகளை ஆடு, மாட்டை அடிப்பது போல் அடித்துள்ளனர். இதுபற்றி யாரிடம் விளக்கம் கேட்கணுமோ அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் ஒன்றும் செய்யாத என்னிடம் விளக்கம் கேட்டுள்ளனர். எந்த தவறு நான் செய்தேன் . தமிழகத்தில் நாங்குநேரி தொகுதியில் 35 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இது தமிழகத்தில் சரித்திரமாக உள்ளது. வேறு எந்த தொகுதியிலும் இவ்வளவு உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை. தற்போதைய முடிவு என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது'' என்றார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications